கிணத்துக்கடவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடை அமைக்க 14-பேருக்கு அனுமதி-வருவாய்த்துறை தகவல்.!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிணத்துக்கடவு தாலுகா பகுதிகளில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கு 17-பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், 14-பேருக்கு அனுமதி கிடைத்துள்ளது.


கோவை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிணத்துக்கடவு தாலுகா பகுதிகளில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கு 17-பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், 14-பேருக்கு அனுமதி கிடைத்துள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிணத்துக்கடவு தாலுகா பகுதிகளில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கு கிணத்துக்கடவு, வடசித்தூர், காட்டம்பட்டி, நல்லட்டிபாளையம், சொலவம்பாளையம், வட புதூர் ஆகிய பகுதிகளிலிருந்து 17-பேர் விண்ணப்பித்திருந்தனர்.



பட்டாசு கடை அமைக்க விண்ணப்பம் கொடுத்திருந்த நபர்கள் குறித்து ஏற்கனவே போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், கிணத்துக்கடவு தாலுகா பகுதிகளில் பட்டாசு கடை அமைக்க அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்த பகுதிகளில் பொள்ளாச்சி சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் சென்று நேரில் ஆய்வு நடத்தி விசாரணை நடத்தினார்.



இதில் கிணத்துக்கடவில் 2-கடைகள், நல்லட்டிபாளையத்தில் ஒரு கடை என மொத்தம் 3-கடைகள் பட்டாசு கடை வைப்பதற்குத் தகுதி வாய்ந்த இடம் இல்லாததால் அந்த 3-பகுதிகளில் பட்டாசு கடை வைக்க அனுமதி இல்லை என ரத்து செய்தார்.

தற்போது கிணத்துக்கடவு தாலுகா பகுதிகளில் விண்ணப்பித்திருந்த 17-கடைகளில் 14-பட்டாசு கடைகளுக்கு மட்டுமே அனுமதி கிடைத்துள்ளது.

இந்த ஆய்வின்போது சப்-கலெக்டருடன் கிணத்துக்கடவு தாசில்தார் சசிரேகா, வருவாய் ஆய்வாளர் லலிதா, கிராம நிர்வாக அலுவலர்கள் விமல்மாதவன், வாசுதேவ் உட்பட வருவாய்த்துறையினர் உடன் சென்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...