தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிணத்துக்கடவு தாலுகா பகுதிகளில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கு 17-பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், 14-பேருக்கு அனுமதி கிடைத்துள்ளது.
கோவை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிணத்துக்கடவு தாலுகா பகுதிகளில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கு 17-பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், 14-பேருக்கு அனுமதி கிடைத்துள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிணத்துக்கடவு தாலுகா பகுதிகளில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கு கிணத்துக்கடவு, வடசித்தூர், காட்டம்பட்டி, நல்லட்டிபாளையம், சொலவம்பாளையம், வட புதூர் ஆகிய பகுதிகளிலிருந்து 17-பேர் விண்ணப்பித்திருந்தனர்.

பட்டாசு கடை அமைக்க விண்ணப்பம் கொடுத்திருந்த நபர்கள் குறித்து ஏற்கனவே போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், கிணத்துக்கடவு தாலுகா பகுதிகளில் பட்டாசு கடை அமைக்க அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்த பகுதிகளில் பொள்ளாச்சி சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் சென்று நேரில் ஆய்வு நடத்தி விசாரணை நடத்தினார்.

இதில் கிணத்துக்கடவில் 2-கடைகள், நல்லட்டிபாளையத்தில் ஒரு கடை என மொத்தம் 3-கடைகள் பட்டாசு கடை வைப்பதற்குத் தகுதி வாய்ந்த இடம் இல்லாததால் அந்த 3-பகுதிகளில் பட்டாசு கடை வைக்க அனுமதி இல்லை என ரத்து செய்தார்.
தற்போது கிணத்துக்கடவு தாலுகா பகுதிகளில் விண்ணப்பித்திருந்த 17-கடைகளில் 14-பட்டாசு கடைகளுக்கு மட்டுமே அனுமதி கிடைத்துள்ளது.
இந்த ஆய்வின்போது சப்-கலெக்டருடன் கிணத்துக்கடவு தாசில்தார் சசிரேகா, வருவாய் ஆய்வாளர் லலிதா, கிராம நிர்வாக அலுவலர்கள் விமல்மாதவன், வாசுதேவ் உட்பட வருவாய்த்துறையினர் உடன் சென்றனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிணத்துக்கடவு தாலுகா பகுதிகளில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கு கிணத்துக்கடவு, வடசித்தூர், காட்டம்பட்டி, நல்லட்டிபாளையம், சொலவம்பாளையம், வட புதூர் ஆகிய பகுதிகளிலிருந்து 17-பேர் விண்ணப்பித்திருந்தனர்.
பட்டாசு கடை அமைக்க விண்ணப்பம் கொடுத்திருந்த நபர்கள் குறித்து ஏற்கனவே போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், கிணத்துக்கடவு தாலுகா பகுதிகளில் பட்டாசு கடை அமைக்க அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்த பகுதிகளில் பொள்ளாச்சி சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் சென்று நேரில் ஆய்வு நடத்தி விசாரணை நடத்தினார்.
இதில் கிணத்துக்கடவில் 2-கடைகள், நல்லட்டிபாளையத்தில் ஒரு கடை என மொத்தம் 3-கடைகள் பட்டாசு கடை வைப்பதற்குத் தகுதி வாய்ந்த இடம் இல்லாததால் அந்த 3-பகுதிகளில் பட்டாசு கடை வைக்க அனுமதி இல்லை என ரத்து செய்தார்.
தற்போது கிணத்துக்கடவு தாலுகா பகுதிகளில் விண்ணப்பித்திருந்த 17-கடைகளில் 14-பட்டாசு கடைகளுக்கு மட்டுமே அனுமதி கிடைத்துள்ளது.
இந்த ஆய்வின்போது சப்-கலெக்டருடன் கிணத்துக்கடவு தாசில்தார் சசிரேகா, வருவாய் ஆய்வாளர் லலிதா, கிராம நிர்வாக அலுவலர்கள் விமல்மாதவன், வாசுதேவ் உட்பட வருவாய்த்துறையினர் உடன் சென்றனர்.