மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு கோவை ஆட்சியர் அணிவித்த காலனி விவகாரம்: உடனே காலனி வழங்கிய மாற்றுத் திறனாளிகள் நலத்துறையினர்...!

சிறுவனுக்கு சரியான அளவு இல்லாத காரணமாக, காலனியை பொருத்த முடியாத சூழல் ஏற்பட்டது. காலனியை சரி செய்யும் நபர் கால தாமதம் செய்ததின் காரணமாக தாமதம் ஏற்பட்டது என ஆட்சியர் விளக்கம்.



கோவை: கோவையை சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு ஆட்சியர் அணிவித்த காலனியை கொடுக்காமல் இழுத்தடித்ததாக செய்தி வெளியான நிலையில், அந்த புகாரின் பேரில் மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி, மாற்று திறனாளிகள் நலத்துறையினர், அந்த சிறுவனுக்கு சேர வேண்டிய காலனியை இன்று வழங்கினர்.

கோவை போத்தனூரை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளியான வேல்முருகன். அப்பகுதியில், பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த ஜூலை மாதம், தமிழக அரசின் இலவச வீடு வேண்டி, மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க குடும்பத்துடன் வந்திருந்தார், வேல்முருகன். அப்போது, மாற்றுத்திறனாளியான வேல்முருகனின் மகனுக்கு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட காலனிகளை மாவட்ட ஆட்சியர் சமீரன் சிறுவனுக்கு அணிவித்தார். ஆட்சியரின் இந்த செயல் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது. மேலும், அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

இந்நிலையில், அந்த நிகழ்வு முடிந்ததும், காலனியை பழுது பார்க்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள், அவற்றை திரும்ப பெற்று கொண்டதாகவும், அதிகாரிகளிடம் கேட்டபோதும், காலனியை கொடுக்காமல் இரண்டு மாதமாக இழுத்தடித்து வருவதாக, வேல்முருகன் நேற்று குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இது குறித்து செய்திகள் வெளியான நிலையில், அது மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்குச் சென்றது.உடனடியாக, சிறுவனுக்கு காலனி வழங்க மாற்று திறனாளிகள் நலத்துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.மேலும், சிறுவனுக்கு சரியான அளவு இல்லாத காரணமாக அதனைப் பொருத்த முடியாத சூழலில் சரி செய்ய கொடுக்கப்பட்டதாகவும் காலணிகள் சரி செய்யும் நபர் கால தாமதம் செய்ததின் காரணமாக தாமதம் ஏற்பட்டது என விளக்கம் அளித்துள்ளார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...