திருப்பூரில் பனியன் தொழிலாளர்களுக்கு போதை சாக்லேட்டுகள் விற்பனை: உ.பி., வாலிபர்கள் கைது.!!

உத்தரப்பிரதேசத்தில் இருந்து போதை மருந்து கலக்கப்பட்ட சாக்லேட்டுகளை மொத்தமாக வாங்கி நியூ திருப்பூரில் விற்பனை செய்த வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.


திருப்பூர்: நியூ திருப்பூரில் போதை சாக்லெட்களை விற்ற உ.பி., வாலிபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

பெருமாநல்லுார் காவல்துறை நேற்று மாலை கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, நியூ திருப்பூர் ரவுண்டானா பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்றிருந்த இருவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அவர்கள் உத்தரப்பிரதேச மாநிலம், முபாரக்பூர் பகுதியைச் சேர்ந்த திரிலோகி சொங்கர்-27, கியாமுதின்-30, என்பதும் இருவரும் நியூ திருப்பூர் பகுதியில் தங்கி அங்குள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

இருவரும் உத்தரப்பிரதேசத்திலிருந்து போதை மருந்து கலக்கப்பட்ட சாக்லெட்களை மொத்தமாக வாங்கி வந்து நியூ திருப்பூர் பகுதியில் உள்ள பனியன் தொழிலாளர்களுக்கு ஒரு சாக்லேட் 20 ரூபாய் வீதம் விற்று வந்துள்ளனர்.

இருவரையும் கைது செய்த காவல்துறை அவர்களிடமிருந்து 3.5 கிலோ போதை சாக்லேட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...