உத்தரப்பிரதேசத்தில் இருந்து போதை மருந்து கலக்கப்பட்ட சாக்லேட்டுகளை மொத்தமாக வாங்கி நியூ திருப்பூரில் விற்பனை செய்த வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர்: நியூ திருப்பூரில் போதை சாக்லெட்களை விற்ற உ.பி., வாலிபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
பெருமாநல்லுார் காவல்துறை நேற்று மாலை கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, நியூ திருப்பூர் ரவுண்டானா பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்றிருந்த இருவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர்கள் உத்தரப்பிரதேச மாநிலம், முபாரக்பூர் பகுதியைச் சேர்ந்த திரிலோகி சொங்கர்-27, கியாமுதின்-30, என்பதும் இருவரும் நியூ திருப்பூர் பகுதியில் தங்கி அங்குள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
இருவரும் உத்தரப்பிரதேசத்திலிருந்து போதை மருந்து கலக்கப்பட்ட சாக்லெட்களை மொத்தமாக வாங்கி வந்து நியூ திருப்பூர் பகுதியில் உள்ள பனியன் தொழிலாளர்களுக்கு ஒரு சாக்லேட் 20 ரூபாய் வீதம் விற்று வந்துள்ளனர்.
இருவரையும் கைது செய்த காவல்துறை அவர்களிடமிருந்து 3.5 கிலோ போதை சாக்லேட்டுகளை பறிமுதல் செய்தனர்.
பெருமாநல்லுார் காவல்துறை நேற்று மாலை கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, நியூ திருப்பூர் ரவுண்டானா பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்றிருந்த இருவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர்கள் உத்தரப்பிரதேச மாநிலம், முபாரக்பூர் பகுதியைச் சேர்ந்த திரிலோகி சொங்கர்-27, கியாமுதின்-30, என்பதும் இருவரும் நியூ திருப்பூர் பகுதியில் தங்கி அங்குள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
இருவரும் உத்தரப்பிரதேசத்திலிருந்து போதை மருந்து கலக்கப்பட்ட சாக்லெட்களை மொத்தமாக வாங்கி வந்து நியூ திருப்பூர் பகுதியில் உள்ள பனியன் தொழிலாளர்களுக்கு ஒரு சாக்லேட் 20 ரூபாய் வீதம் விற்று வந்துள்ளனர்.
இருவரையும் கைது செய்த காவல்துறை அவர்களிடமிருந்து 3.5 கிலோ போதை சாக்லேட்டுகளை பறிமுதல் செய்தனர்.