கோவையில் உள்ள உளநல மையத்துக்கு 20-ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள்: அதிகாரிகள் தகவல்.!!!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் சமூக உளநல மையத்துக்கு 20-ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொது மக்கள் சமூக உளநல மையத்தை 0422-2201824, 2201825, 2201828, 2201829 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் சமூக உளநல மையத்துக்கு 20-ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கூறியதாவது:-

கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு, நோய்த் தொற்று அச்சம் காரணமாக பெரும்பாலானோர் மன உளைச்சலுக்கு உள்ளாகினர். இதனால் தற்கொலை எண்ணம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

இது போன்றவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி தற்கொலை எண்ணத்திலிருந்து மீட்டெடுக்கும் விதமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் சமூக உளநல மையம் தொடங்கப்பட்டது. இம்மையத்தை தொடர்புகொள்பவர்களுக்கு மன நல ஆலோசகர்கள் தேவையான ஆலோசனைகளை அளித்து தற்கொலை எண்ணம், மன இறுக்கத்திலிருந்து வெளியே கொண்டு வருகின்றனர்.

பொது மக்கள் சமூக உளநல மையத்தை 0422-2201824, 2201825, 2201828, 2201829 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இந்த சமூக உளநல மையத்துக்கு இதுவரை 20-ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளன. பல்வேறு காரணங்களால் மன உளைச்சல், மனச்சோர்வு அடைந்தவர்கள், அமைதியை இழந்தவர்கள் சமூக உளநல மையத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...