ஓட்டுப்பெட்டி வைக்கப்பட்டுள்ள கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு..!

வரும் 12ம் தேதி வாக்குகள் எண்ணப்படுவதால், ஓட்டுப் பெட்டிகள் கிணத்துகடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


கோவை: ஓட்டுப்பெட்டி வைக்கப்பட்டுள்ள கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நெ.10 முத்தூர் 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 4 பேர் போட்டியிட்டனர்.

இந்த பதவிக்கான தேர்தல் நேற்று முன்தினம் நெ.10 முத்தூர் அரசு நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் காலை 7 மணி முதல் தொடங்கி மாலை 6 மணிவரை அமைதியான முறையில் வாக்குபதிவு நடைபெற்றது.

மாலை 6 மணி வரை நடத்தப்பட்ட வாக்குப்பதிவில் 144 ஆண்களும், 144 பெண்களும் என 288 பேர் வாக்களித்தனர். அதன்படி, வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் 75 % பேர் வாக்களித்துள்ளனர்.

இந்த நிலையில், வாக்குப்பதிவு நிறைவடைந்ததையடுத்து முகவர்கள் முன்னிலையில் வாக்குப் பெட்டியில் சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்குள்ள அறையில் ஓட்டுப் பெட்டிகள் இறக்கி வைக்கப்பட்டு, அறைக்கு சீல் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



இதனிடையே, வரும் 12ம் தேதி வாக்குகள் எண்ணப்படுவதால், ஓட்டுப் பெட்டிகள் கிணத்துகடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் ஒரு டிஎஸ்பி, ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு சப்-இன்ஸ்பெக்டர் உட்பட்ட 34 பேர் 3 பிரிவுகளாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...