வரும் 12ம் தேதி வாக்குகள் எண்ணப்படுவதால், ஓட்டுப் பெட்டிகள் கிணத்துகடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை: ஓட்டுப்பெட்டி வைக்கப்பட்டுள்ள கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நெ.10 முத்தூர் 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 4 பேர் போட்டியிட்டனர்.
இந்த பதவிக்கான தேர்தல் நேற்று முன்தினம் நெ.10 முத்தூர் அரசு நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் காலை 7 மணி முதல் தொடங்கி மாலை 6 மணிவரை அமைதியான முறையில் வாக்குபதிவு நடைபெற்றது.
மாலை 6 மணி வரை நடத்தப்பட்ட வாக்குப்பதிவில் 144 ஆண்களும், 144 பெண்களும் என 288 பேர் வாக்களித்தனர். அதன்படி, வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் 75 % பேர் வாக்களித்துள்ளனர்.
இந்த நிலையில், வாக்குப்பதிவு நிறைவடைந்ததையடுத்து முகவர்கள் முன்னிலையில் வாக்குப் பெட்டியில் சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்குள்ள அறையில் ஓட்டுப் பெட்டிகள் இறக்கி வைக்கப்பட்டு, அறைக்கு சீல் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, வரும் 12ம் தேதி வாக்குகள் எண்ணப்படுவதால், ஓட்டுப் பெட்டிகள் கிணத்துகடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் ஒரு டிஎஸ்பி, ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு சப்-இன்ஸ்பெக்டர் உட்பட்ட 34 பேர் 3 பிரிவுகளாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நெ.10 முத்தூர் 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 4 பேர் போட்டியிட்டனர்.
இந்த பதவிக்கான தேர்தல் நேற்று முன்தினம் நெ.10 முத்தூர் அரசு நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் காலை 7 மணி முதல் தொடங்கி மாலை 6 மணிவரை அமைதியான முறையில் வாக்குபதிவு நடைபெற்றது.
மாலை 6 மணி வரை நடத்தப்பட்ட வாக்குப்பதிவில் 144 ஆண்களும், 144 பெண்களும் என 288 பேர் வாக்களித்தனர். அதன்படி, வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் 75 % பேர் வாக்களித்துள்ளனர்.
இந்த நிலையில், வாக்குப்பதிவு நிறைவடைந்ததையடுத்து முகவர்கள் முன்னிலையில் வாக்குப் பெட்டியில் சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்குள்ள அறையில் ஓட்டுப் பெட்டிகள் இறக்கி வைக்கப்பட்டு, அறைக்கு சீல் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, வரும் 12ம் தேதி வாக்குகள் எண்ணப்படுவதால், ஓட்டுப் பெட்டிகள் கிணத்துகடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் ஒரு டிஎஸ்பி, ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு சப்-இன்ஸ்பெக்டர் உட்பட்ட 34 பேர் 3 பிரிவுகளாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.