கோவையில் தீபாவளி கூட்டத்தை பயன்படுத்தி ஜேப்படியில் ஈடுபடுவர்களை பிடிக்க தனிப்படை அமைப்பு..!

ஜேப்படியில் ஈடுபடுவர்களை பிடிக்க மேற்கு உதவி காவல் ஆணையர் மணிகண்டன் தனிப்படை அமைத்து. கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.


கோவை: கோவையில் தீபாவளி கூட்டத்தை பயன்படுத்தி ஜேப்படியில் ஈடுபடுவர்களை பிடிக்க மேற்கு உதவி காவல் ஆணையர் மணிகண்டன் தனிப்படை அமைத்து கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் அடுத்த மாதம் 4-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதையொட்டி கோவை மக்கள் தீபாவளிக்கு தேவையான பொருட்களை தற்போது கடைகளுக்கு சென்றுவாங்கி வருகின்றனர்.

இந்நிலையில் தீபாவளி கூட்டத்தை பயன்படுத்தி ஜேப்படியில் ஈடுபடுவர்களை பிடிக்க மேற்கு உதவி கமிஷனர் மணிகண்டன் தனிப்படை அமைத்து. கண்காணிப்பை தீவிரபடுத்த உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையில் கார்த்தி, உமா, பூபதி உள்ளிட்ட போலீசார் கடைவீதி, பூ மார்க்கெட் உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சாதாரண உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

பூ மார்க்கெட் அருகே வந்த ஒரு அரசு பேருந்தில் ஏறி போலீசார் கண்காணித்தனர். அப்போது, பேருந்தில் நின்றிருந்த இளம்பென் ஒருவர் தனது அருகே நின்ற பெண் கையில் வைத்திருந்த பர்சில் இருந்து பணத்தை எடுக்க முயற்சி செய்தார். இதை பார்த்த போலீசார் விரைந்து அவரின் அருகே வந்தனர்.

போலீசார் வருவதை பார்த்ததும் அந்த இளம்பெண் பேருந்தில் இருந்து இறங்கி ஓடினார். போலீசாரும் விடாமல் அந்த பெண்ணை துரத்திச் சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த முத்துமாரி(வயது26) என்பது தெரியவந்தது. மேலும் இவர் காலை முதல் மாலை வரை பேருந்தில் பயணித்து மற்ற பெண் பயணிகளிடம் திருடுவதை வாடிக்கையாக வைத்துள்ளதும், திருடிய பணத்தை கொண்டு ஜாலியாக வாழ்ந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் அந்த பெண் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இதே போல், பூமார்க்கெட் பகுதியில் செல்போன் திருடிய திண்டுக்கல்லைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணையும் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, தீபாவளி கூட்டத்தை பயன்படுத்தி, மக்களின் கவனத்தை திசை திருப்பி சிலர் திருட்டில் ஈடுபடுகிறார்கள். இதனால் தற்போது ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளோம், என்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...