ஜேப்படியில் ஈடுபடுவர்களை பிடிக்க மேற்கு உதவி காவல் ஆணையர் மணிகண்டன் தனிப்படை அமைத்து. கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
கோவை: கோவையில் தீபாவளி கூட்டத்தை பயன்படுத்தி ஜேப்படியில் ஈடுபடுவர்களை பிடிக்க மேற்கு உதவி காவல் ஆணையர் மணிகண்டன் தனிப்படை அமைத்து கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் அடுத்த மாதம் 4-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதையொட்டி கோவை மக்கள் தீபாவளிக்கு தேவையான பொருட்களை தற்போது கடைகளுக்கு சென்றுவாங்கி வருகின்றனர்.
இந்நிலையில் தீபாவளி கூட்டத்தை பயன்படுத்தி ஜேப்படியில் ஈடுபடுவர்களை பிடிக்க மேற்கு உதவி கமிஷனர் மணிகண்டன் தனிப்படை அமைத்து. கண்காணிப்பை தீவிரபடுத்த உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையில் கார்த்தி, உமா, பூபதி உள்ளிட்ட போலீசார் கடைவீதி, பூ மார்க்கெட் உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சாதாரண உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
பூ மார்க்கெட் அருகே வந்த ஒரு அரசு பேருந்தில் ஏறி போலீசார் கண்காணித்தனர். அப்போது, பேருந்தில் நின்றிருந்த இளம்பென் ஒருவர் தனது அருகே நின்ற பெண் கையில் வைத்திருந்த பர்சில் இருந்து பணத்தை எடுக்க முயற்சி செய்தார். இதை பார்த்த போலீசார் விரைந்து அவரின் அருகே வந்தனர்.
போலீசார் வருவதை பார்த்ததும் அந்த இளம்பெண் பேருந்தில் இருந்து இறங்கி ஓடினார். போலீசாரும் விடாமல் அந்த பெண்ணை துரத்திச் சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த முத்துமாரி(வயது26) என்பது தெரியவந்தது. மேலும் இவர் காலை முதல் மாலை வரை பேருந்தில் பயணித்து மற்ற பெண் பயணிகளிடம் திருடுவதை வாடிக்கையாக வைத்துள்ளதும், திருடிய பணத்தை கொண்டு ஜாலியாக வாழ்ந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் அந்த பெண் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இதே போல், பூமார்க்கெட் பகுதியில் செல்போன் திருடிய திண்டுக்கல்லைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணையும் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, தீபாவளி கூட்டத்தை பயன்படுத்தி, மக்களின் கவனத்தை திசை திருப்பி சிலர் திருட்டில் ஈடுபடுகிறார்கள். இதனால் தற்போது ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளோம், என்றனர்.
நாடு முழுவதும் அடுத்த மாதம் 4-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதையொட்டி கோவை மக்கள் தீபாவளிக்கு தேவையான பொருட்களை தற்போது கடைகளுக்கு சென்றுவாங்கி வருகின்றனர்.
இந்நிலையில் தீபாவளி கூட்டத்தை பயன்படுத்தி ஜேப்படியில் ஈடுபடுவர்களை பிடிக்க மேற்கு உதவி கமிஷனர் மணிகண்டன் தனிப்படை அமைத்து. கண்காணிப்பை தீவிரபடுத்த உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையில் கார்த்தி, உமா, பூபதி உள்ளிட்ட போலீசார் கடைவீதி, பூ மார்க்கெட் உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சாதாரண உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
பூ மார்க்கெட் அருகே வந்த ஒரு அரசு பேருந்தில் ஏறி போலீசார் கண்காணித்தனர். அப்போது, பேருந்தில் நின்றிருந்த இளம்பென் ஒருவர் தனது அருகே நின்ற பெண் கையில் வைத்திருந்த பர்சில் இருந்து பணத்தை எடுக்க முயற்சி செய்தார். இதை பார்த்த போலீசார் விரைந்து அவரின் அருகே வந்தனர்.
போலீசார் வருவதை பார்த்ததும் அந்த இளம்பெண் பேருந்தில் இருந்து இறங்கி ஓடினார். போலீசாரும் விடாமல் அந்த பெண்ணை துரத்திச் சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த முத்துமாரி(வயது26) என்பது தெரியவந்தது. மேலும் இவர் காலை முதல் மாலை வரை பேருந்தில் பயணித்து மற்ற பெண் பயணிகளிடம் திருடுவதை வாடிக்கையாக வைத்துள்ளதும், திருடிய பணத்தை கொண்டு ஜாலியாக வாழ்ந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் அந்த பெண் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இதே போல், பூமார்க்கெட் பகுதியில் செல்போன் திருடிய திண்டுக்கல்லைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணையும் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, தீபாவளி கூட்டத்தை பயன்படுத்தி, மக்களின் கவனத்தை திசை திருப்பி சிலர் திருட்டில் ஈடுபடுகிறார்கள். இதனால் தற்போது ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளோம், என்றனர்.