அனைத்து ரயில்களிலும் ஆர்ஏசி இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்திய ரயில்வே முடிவு

அனைத்து ரயில்களிலும் ஆர்ஏசி இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. இதுகுறித்து இந்தியன் ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

ரயில் பயணங்களுக்கு முன்பதிவு செய்யும் போது, ஆர்ஏசி என்று குறிப்பிட்டிருந்தால் பயணம் செய்வது உறுதியாகி விட்டது என்று அர்த்தம். ஆனால் படுக்கை வசதியில்லாமல், இருக்கையில் அமர்ந்து கொண்டே செல்ல வேண்டியிருக்கும். முன்பதிவின் போது டிக்கெட் கிடைத்தவர்கள் கடைசி நேரத்தில் பயணத்தை ரத்து செய்துவிட்டால், அந்த இருக்கை மற்றவருக்கு கிடைக்கும்.

தற்போது, ஒவ்வொரு கம்பார்ட்மெண்டிலும் ஆர்ஏசி ஒதுக்கீடு எண்ணிக்கை 5 ஆக உள்ள நிலையில் அது, 7ஆக அதிகரிக்கப்படுவதன் மூலம், 14 பேருக்கு ஆர்ஏசி ஒதுக்கீடு இருக்கைகள் கிடைக்கும். 3 அடுக்கு குளிர்சாதன பெட்டியில் 2 ஆர்ஏசி ஒதுக்கீடு உள்ள நிலையில், அது 4 ஆக அதிகரிக்கப்படுவதன் மூலம் 8 பேருக்கு ஆர்ஏசி ஒதுக்கீடு இருக்கை வசதி கிடைக்கும்.

மேலும், 2 அடுக்கு குளிர்சாதன பெட்டியில் ஆர்ஏசி ஒதுக்கீடு இருக்கை 2-ஆக உள்ள நிலையில், அது 3-ஆக அதிகரிக்கப்படுவதன் மூலம், 6 பேருக்கு இருக்கை வசதி உறுதியாகும் என்று ரயில்வே அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் கூறினார். இந்த வசதி வரும் 2017 ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...