கோவையில் மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு மாவட்ட ஆட்சியர் அணிவித்த காலனியை கொடுக்காமல் அதிகாரிகள் இழுத்தடித்து வருவது சிறுவனின் தந்தை புகார் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவையில் மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு, ஆட்சியர் அணிவித்த காலனியை கொடுக்காமல் இழுத்தடிக்கும் அதிகாரிகள் - தந்தை புகார்.
கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி வேல்முருகன். இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். தமிழக அரசின் இலவச வீடு வேண்டி, மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க, வேல்முருகன் அவரது மாற்றுத்திறனாளி மகனுடன் வந்திருந்தார். சில மாதங்களுக்கு முன், அவரது மகனுக்கு மாற்றுத்திறனாளிகள் அணியும் ஷூவை, மாவட்ட ஆட்சியர் அணிவித்த சம்பவம், சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ஆட்சியரைப் பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர்.

எங்கே அந்த ஷூ..?
அன்று நிகழ்ச்சி முடிந்ததும், ஆட்சியர் அணிவித்த காலனியை பழுதுபார்க்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள், மீண்டும் வேல்முருகனிடம் இருந்து பெற்றுள்ளனர். பின்னர், வேல்முருகன் அதிகாரிகளிடம் கேட்ட போது, காலனியை கொடுக்காமல் இரண்டு மாதமாக இழுத்தடித்து வருவதாக, அவர் குற்றம் சாட்டினர்.
இது தொடர்பாக வேல்முருகன் கூறுகையில், தன் மகனுக்கு மாவட்ட ஆட்சியர் அணிவித்த காலனியை திரும்பி பெற்றுக்கொண்டதுடன், திருப்பித்தர மறுக்கின்றனர். இதனால், தனது மாற்று திறனாளி மகன் மிகுந்த சிரமப்படுவதாக வருத்தம் தெரிவித்தார். எனவே, இனியும் தாமதிக்காமல், மாவட்ட ஆட்சியர் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து, தன் மகனுக்கு காலணியை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி வேல்முருகன். இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். தமிழக அரசின் இலவச வீடு வேண்டி, மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க, வேல்முருகன் அவரது மாற்றுத்திறனாளி மகனுடன் வந்திருந்தார். சில மாதங்களுக்கு முன், அவரது மகனுக்கு மாற்றுத்திறனாளிகள் அணியும் ஷூவை, மாவட்ட ஆட்சியர் அணிவித்த சம்பவம், சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ஆட்சியரைப் பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர்.
எங்கே அந்த ஷூ..?
அன்று நிகழ்ச்சி முடிந்ததும், ஆட்சியர் அணிவித்த காலனியை பழுதுபார்க்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள், மீண்டும் வேல்முருகனிடம் இருந்து பெற்றுள்ளனர். பின்னர், வேல்முருகன் அதிகாரிகளிடம் கேட்ட போது, காலனியை கொடுக்காமல் இரண்டு மாதமாக இழுத்தடித்து வருவதாக, அவர் குற்றம் சாட்டினர்.
இது தொடர்பாக வேல்முருகன் கூறுகையில், தன் மகனுக்கு மாவட்ட ஆட்சியர் அணிவித்த காலனியை திரும்பி பெற்றுக்கொண்டதுடன், திருப்பித்தர மறுக்கின்றனர். இதனால், தனது மாற்று திறனாளி மகன் மிகுந்த சிரமப்படுவதாக வருத்தம் தெரிவித்தார். எனவே, இனியும் தாமதிக்காமல், மாவட்ட ஆட்சியர் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து, தன் மகனுக்கு காலணியை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.