அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்: திருப்பூரில் பா.ம.க சார்பில் கட்சிக்கொடி ஏற்றப்பட்டு அன்னதானம் வழங்கல்.!!!

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூரில் பாமக சார்பில் கட்சிக் கொடி ஏற்றப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.


திருப்பூர்: பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

அதனை முன்னிட்டு திருப்பூர் மாநகர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாகத் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வீரபாண்டி மற்றும் டி.கே.டி பேருந்து நிறுத்தம் ஆகிய பகுதிகளில் பாமக கட்சிக் கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும், டி.கே.டி பேருந்து நிறுத்தம் பகுதியில்கட்சிக் கொடி ஏற்றப்பட்டது உடன் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.



இந்நிகழ்ச்சியில், மாநில துணைப் பொதுச்செயலாளர் ரமேஷ், தெற்கு மாவட்டச் செயலாளர் ஆனந்தன், வடக்கு மாவட்டச் செயலாளர் ஜெய்சங்கர்,தெற்கு மாவட்ட தலைவர் மணிகண்ணன், வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர் கோவிந்தராஜ், மாநில துணை அமைப்புச் செயலாளர் பனங்காட்டு ராஜேந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...