கோவை மதுக்கரையில் உள்ள பிருந்தாவன் வித்யாலயா என்ற தனியார் பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் இணைந்து வால்பாறைக்கு சுற்றுலா சென்ற போது, ஆழியார் அருகே விபத்து.
கோவை: வால்பாறை அருகே கோவை தனியார் பள்ளி வாகனம் விபத்துக்குள்ளான சம்பவத்தில், ஒரு ஆசிரியைக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
கோவை மதுக்கரையில் உள்ள பிருந்தாவன் வித்யாலயா என்ற தனியார் பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் இணைந்து வால்பாறைக்கு பள்ளி வாகனத்தில் சுற்றுலா சென்றுள்ளனர். பள்ளி வாகனம் பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் சென்று கொண்டிருந்த போது, ஆழியாறு புளியங்குடியில், தனியார் நிறுவன லாரி மீது பள்ளி வாகனம் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இதனால், பேருந்தின் முன்பக்க கண்ணாடி சுக்குநூறாக நொறுங்கியதோடு, பள்ளி ஆசிரியையான முத்துக்குமாரி என்பவர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டார். இதுகுறித்து, தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த ஆசிரியையை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த ஆழியார் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மதுக்கரையில் உள்ள பிருந்தாவன் வித்யாலயா என்ற தனியார் பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் இணைந்து வால்பாறைக்கு பள்ளி வாகனத்தில் சுற்றுலா சென்றுள்ளனர். பள்ளி வாகனம் பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் சென்று கொண்டிருந்த போது, ஆழியாறு புளியங்குடியில், தனியார் நிறுவன லாரி மீது பள்ளி வாகனம் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதனால், பேருந்தின் முன்பக்க கண்ணாடி சுக்குநூறாக நொறுங்கியதோடு, பள்ளி ஆசிரியையான முத்துக்குமாரி என்பவர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டார். இதுகுறித்து, தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த ஆசிரியையை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த ஆழியார் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.