வால்பாறைக்கு சுற்றுலா சென்ற கோவை பள்ளி வாகனம் விபத்து; ஆசிரியைக்கு காயம்.

கோவை மதுக்கரையில் உள்ள பிருந்தாவன் வித்யாலயா என்ற தனியார் பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் இணைந்து வால்பாறைக்கு சுற்றுலா சென்ற போது, ஆழியார் அருகே விபத்து.


கோவை: வால்பாறை அருகே கோவை தனியார் பள்ளி வாகனம் விபத்துக்குள்ளான சம்பவத்தில், ஒரு ஆசிரியைக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

கோவை மதுக்கரையில் உள்ள பிருந்தாவன் வித்யாலயா என்ற தனியார் பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் இணைந்து வால்பாறைக்கு பள்ளி வாகனத்தில் சுற்றுலா சென்றுள்ளனர். பள்ளி வாகனம் பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் சென்று கொண்டிருந்த போது, ஆழியாறு புளியங்குடியில், தனியார் நிறுவன லாரி மீது பள்ளி வாகனம் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.



இதனால், பேருந்தின் முன்பக்க கண்ணாடி சுக்குநூறாக நொறுங்கியதோடு, பள்ளி ஆசிரியையான முத்துக்குமாரி என்பவர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டார். இதுகுறித்து, தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த ஆசிரியையை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.



இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த ஆழியார் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...