ரூ. 21,000 கோடி ஹெராயின் சிக்கிய வழக்கு: கோவையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை; வடவள்ளி பகுதியை சேர்ந்த ஒருவரிடம் விசாரணை.


கோவை: இந்தியாவிலேயே முதன்முறையாக ரூ.21,000 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை, குஜராத், முந்த்ரா துறைமுகத்திலிருந்துவருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள்

கடந்த மாதம் 13-ம் தேதியன்று,

பறிமுதல் செய்தனர். இந்த விவகாரத்தில் டெல்லி, உத்தரப்பிரதேசம், நொய்டா, அகமதாபாத், சென்னை, கோவை, விஜயவாடா உள்ளிட்ட பல இடங்களில்ரெய்டு நடத்தப்பட்டது.

கடந்த மாதம், ஆப்கானிஸ்தானில் இருந்து ஈரான் வழியாக, குஜராத் முந்த்ரா துறைமுகத்திற்கு சரக்கு கப்பலில் கடத்தப்பட்ட, 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 3,000 கிலோ போதைப் பொருளை, டி.ஆர்.ஐ., எனப்படும் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விசாரணையில், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள, 'ஆஷி டிரேடிங்' கம்பெனிக்கு, 'முக பவுடர்' என எழுதப்பட்ட பார்சலில் போதைப் பொருள் கடத்தப்பட்டது தெரியவந்தது.

இந்த நிலையில், சர்வதேச பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருக்குமா என்ற கோணத்திலும் வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால்,, இரு தினங்களுக்கு முன், மத்திய உள்துறை அமைச்சகம், என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பிடம், இவ்வழக்கை ஒப்படைத்தது.

வழக்கின் முக்கிய திருப்பமாக, ஆஷி டிரேடிங் கம்பெனியை, மாமியார் பெயரில் நடத்தி வந்த சென்னையை சேர்ந்த மச்சாவரம் சுதாகர், 45, அவரது மனைவி துர்கா பூரண வைஷாலி, 39, கைது செய்யப்பட்டனர்.

கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்ட, எட்டு பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர், என்று கூறப்படுகிறது. டில்லி மற்றும் கேரளாவில் இருந்து வந்த 10க்கும் மேற்பட்ட என்.ஐ.ஏ., அதிகாரிகள், நேற்று காலை 9:30ல் இருந்து பல மணி நேரம், கொளப்பாக்கத்தில் சுதாகர், அவரது மனைவி வசித்து வரும் வீட்டை முழுமையாக சோதனையிட்டனர்.

இதில், மூன்று 'லேப்டாப்'கள் மற்றும் ஆவணங்கள் சிக்கி உள்ளன.அவற்றில், சென்னை, கோவை, ஆந்திரா மற்றும் கோவாவை சேர்ந்த முக்கிய புள்ளிகளுக்கு, போதைப் பொருள் 'சப்ளை' செய்ததற்கான ஆதாரங்கள் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. சோதனை முழுதும், 'வீடியோ' பதிவு செய்யப்பட்டுள்ளது.

தம்பதியின் வங்கிக் கணக்குகளையும், என்.ஐ.ஏ., அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். சோதனையில் சிக்கிய ஆதாரங்களின் அடிப்படையில், முக்கிய புள்ளிகளின் வீடுகளில் சோதனை நடத்த என்.ஐ.ஏ., அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இந்த வழக்கில், தற்போது கோவையைச் சேர்ந்த ராஜ்குமார், 45, என்பவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது நேற்று மும்பையில் இருந்து கோவை வந்த என்.ஐ.ஏ., அதிகாரிகள் மூவர், கோவை வடவள்ளி, மருதமலை பிரதான சாலை, ராமசாமி நகரில் உள்ள ராஜ்குமாரின் சகோதரர் வீட்டில் சோதனை நடத்தினர். அந்த வீட்டில் தற்போது ராஜ்குமாரின் தாய் வசிக்கிறார். ஹெராயின் கடத்தல் வழக்கு தொடர்பு குறித்த ஆவணங்கள் கிடைக்குமா? என சோதனை நடத்தினர். சோதனையில் குறிப்பிட்ட ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

இதையடுத்து, அங்கிருந்த லேப்டாப், மொபைல் போன், வங்கிக் கணக்கு ஸ்டேட்மென்ட் ஆகியவற்றை கைப்பற்றிச் சென்றனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...