வ.உ சிதம்பரனார் வரலாற்றைப் போற்றும் விதமாக ஐந்து தலைப்புகளின் கீழ், கல்லூரி இளநிலை மற்றும் முதுநிலை பயலும் மாணவ மாணவிகள் போட்டிகளில் கலந்துக் கொண்டனர்.
கோவை: பாரதிய ஜனதா கட்சி சார்பில் செக்கிழுத்த செம்மல் வ உ சிதம்பரனார் 150வது பிறந்த நாளை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி நடைபெற்றது.
கோவை காந்திபுரம் ராம் நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற போட்டிகளில், கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை பயலும் மாணவ மாணவிகள் கலந்துக் கொண்டனர். வ.உ சிதம்பரனார் வரலாற்றை அறிந்து கொள்ளும் விதமாக இந்த பேச்சு போட்டி நடத்தப்பட்டது.
செக்கிழுத்த செம்மல் வ.உ.சி, அந்நிய வணிகத்தைச் சுதேசி வணிகத்தால் அசைத்த வ.உ.சி, இன்றைய தற்சார்பு பாரதத்தின் தலைமகன் வ.உ.சி, ஆன்மீக தமிழறிஞர் மற்றும் தொழிலாளர்களின் தோழன் வ.உ. சிதம்பரனார் என்று ஐந்து தலைப்புகளின் கீழ் போட்டி நடைபெற்றது.

இதில், கலந்துகொண்டு முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு தலா 1,500 ரூபாய் வெகுமதியும், சான்றிதழும் வழங்கப்பட்டது. போட்டியில், நான்காம் இடம் பெற்ற மாணவருக்கு ஆயிரம் ரூபாயும், ஐந்தாம் இடம் பெற்ற மாணவருக்கு ரூபாய் 500 ரூபாயும், ஆறுதல் பரிசாக வழங்கப்பட்டது.

மேலும், போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவியருக்குப் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
முதல் இரண்டு இடங்களைப் பெற்ற மாணவர்கள் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். மாநில அளவில் நடைபெறும் போட்டியில் முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய், இரண்டாம் பரிசாக 50 ஆயிரம், ரூபாய், மூன்றாம் பரிசாக 25 ஆயிரம் ரூபாய், அடுத்து வரும் 10 நபர்களுக்குச் சிறப்புப் பரிசாக தலா பத்தாயிரம் ரூபாயும் வழங்கப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில், வ.உ. சிதம்பரனார் அவர்களின் எட்டாவது மகன் வாலேஸ்வரனின் மகள் மரகத மீனாட்சி ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சிறப்பு அழைப்பாளராகச் சைவ பெருமக்கள் பேரவை தலைவர் சண்முகம் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னராஜ் வாழ்த்துரை வழங்கினார். இவ்விழாவில் நடுவர்களாக அண்ணாமலைநாதன், ஷாஜகான் மற்றும் மெய்ஸ்ரீ ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டச் செயலாளர் மோகனா, கலைச்செல்வி, கல்வியாளர் பிரிவு மாவட்டச் செயலாளர் ஸ்ரீதேவி, தமிழ் வளர்ச்சி பிரிவு மாவட்ட தலைவர் அண்ணாமலை நாதன் மற்றும் பாலசுப்பிரமணி ஆகியோர் விழா ஏற்பாடு செய்தனர்.
கோவை காந்திபுரம் ராம் நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற போட்டிகளில், கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை பயலும் மாணவ மாணவிகள் கலந்துக் கொண்டனர். வ.உ சிதம்பரனார் வரலாற்றை அறிந்து கொள்ளும் விதமாக இந்த பேச்சு போட்டி நடத்தப்பட்டது.
செக்கிழுத்த செம்மல் வ.உ.சி, அந்நிய வணிகத்தைச் சுதேசி வணிகத்தால் அசைத்த வ.உ.சி, இன்றைய தற்சார்பு பாரதத்தின் தலைமகன் வ.உ.சி, ஆன்மீக தமிழறிஞர் மற்றும் தொழிலாளர்களின் தோழன் வ.உ. சிதம்பரனார் என்று ஐந்து தலைப்புகளின் கீழ் போட்டி நடைபெற்றது.
இதில், கலந்துகொண்டு முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு தலா 1,500 ரூபாய் வெகுமதியும், சான்றிதழும் வழங்கப்பட்டது. போட்டியில், நான்காம் இடம் பெற்ற மாணவருக்கு ஆயிரம் ரூபாயும், ஐந்தாம் இடம் பெற்ற மாணவருக்கு ரூபாய் 500 ரூபாயும், ஆறுதல் பரிசாக வழங்கப்பட்டது.
மேலும், போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவியருக்குப் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
முதல் இரண்டு இடங்களைப் பெற்ற மாணவர்கள் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். மாநில அளவில் நடைபெறும் போட்டியில் முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய், இரண்டாம் பரிசாக 50 ஆயிரம், ரூபாய், மூன்றாம் பரிசாக 25 ஆயிரம் ரூபாய், அடுத்து வரும் 10 நபர்களுக்குச் சிறப்புப் பரிசாக தலா பத்தாயிரம் ரூபாயும் வழங்கப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில், வ.உ. சிதம்பரனார் அவர்களின் எட்டாவது மகன் வாலேஸ்வரனின் மகள் மரகத மீனாட்சி ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சிறப்பு அழைப்பாளராகச் சைவ பெருமக்கள் பேரவை தலைவர் சண்முகம் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னராஜ் வாழ்த்துரை வழங்கினார். இவ்விழாவில் நடுவர்களாக அண்ணாமலைநாதன், ஷாஜகான் மற்றும் மெய்ஸ்ரீ ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டச் செயலாளர் மோகனா, கலைச்செல்வி, கல்வியாளர் பிரிவு மாவட்டச் செயலாளர் ஸ்ரீதேவி, தமிழ் வளர்ச்சி பிரிவு மாவட்ட தலைவர் அண்ணாமலை நாதன் மற்றும் பாலசுப்பிரமணி ஆகியோர் விழா ஏற்பாடு செய்தனர்.