தன் மகன் மீது மருமகள் குடும்பத்தினர் தொடர்ந்து பொய்யான புகார்களைக் கொடுத்து வருவதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
கோவை: தற்கொலை எண்ணத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கும் தனது மகனைக் காப்பாற்றக்கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி திருவரம்பூரை சேர்ந்த தமிழ்ச்செல்வி என்பவர் தனது இரண்டாவது மகன் விஜயை காப்பாற்றக் கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவை அளித்துள்ளார்.
இந்த மனுவில், தனது மகன் வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் 2016ம் ஆண்டு முகநூலின் மூலம் அறிமுகமாகிய மோகனப்பிரியா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.
இந்த நிலையில், 2019ம் ஆண்டு விவாகரத்து வேண்டி கோயம்புத்தூர் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மூன்று வயதில் இவர்களுக்கு ஆண் குழந்தை உள்ளது.
மோகனப்பிரியாவின் குடும்பம் பிறரின் சொத்துக்களை அபகரித்து வாழ்வதையே தொடர்ந்து செய்து வந்ததாகவும், இவர்கள் குடும்பம் வெவ்வேறு இடங்களில் இதுபோன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளது தெரியாமல் தன் மகன் காதலித்து திருமணம் செய்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும், மோகனப்பிரியா செந்தில் என்பவரைக் கல்யாணம் செய்ய முடிவெடுத்தே இது போன்ற செயல்களை செய்வதாகவும், தன் மகனிடம் இருந்து அனைத்து சொத்துக்களையும் இவர்கள் அபகரித்துக் கொண்டதாகவும், தன் மகனிடம் இருந்து பணம் இனி பெறமுடியாது என்று அவர்களுக்குத் தோன்றியதை அடுத்து செந்தில் என்பவரின் மூலம் மிரட்டி வருகின்றனர்.
இதுகுறித்து, போலீசாரிடம் புகார் அளித்ததின் அடிப்படையில் அவர்கள் விசாரணை நடத்தித் தன் மகன் மீது எவ்வித தவறும் இல்லை என்று கூறியதை அடுத்து, பொய்யான புகார்களை மோகனப்பிரியா குடும்பத்தினர் கொடுத்து வருகின்றனர் என்றார்.
மேலும், CM CELL- லில் புகார் அளித்தும், அவர்கள் விசாரணையிலும் எனது மகன் எந்த தவறும் செய்யவில்லை என்று ஊர்ஜிதப்படுத்தினர். ஆனாலும், தொடர்ந்து வெளிநாட்டிலுள்ள என் மகனுக்குத் தொடர்ந்து அலைபேசியின் மூலம் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
மேலும், தனது பேரனை என் மகனிடம் காட்ட மறுக்கின்றனர். இதனால், பெரிதும் மனவேதனை அடைந்த என் மகன் தற்கொலை செய்யும் அளவிற்குப் போய்விட்டான் என்று குறிப்பிட்டுள்ள அவர், தன் மகனை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
திருச்சி திருவரம்பூரை சேர்ந்த தமிழ்ச்செல்வி என்பவர் தனது இரண்டாவது மகன் விஜயை காப்பாற்றக் கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவை அளித்துள்ளார்.
இந்த மனுவில், தனது மகன் வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் 2016ம் ஆண்டு முகநூலின் மூலம் அறிமுகமாகிய மோகனப்பிரியா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.
இந்த நிலையில், 2019ம் ஆண்டு விவாகரத்து வேண்டி கோயம்புத்தூர் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மூன்று வயதில் இவர்களுக்கு ஆண் குழந்தை உள்ளது.
மோகனப்பிரியாவின் குடும்பம் பிறரின் சொத்துக்களை அபகரித்து வாழ்வதையே தொடர்ந்து செய்து வந்ததாகவும், இவர்கள் குடும்பம் வெவ்வேறு இடங்களில் இதுபோன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளது தெரியாமல் தன் மகன் காதலித்து திருமணம் செய்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும், மோகனப்பிரியா செந்தில் என்பவரைக் கல்யாணம் செய்ய முடிவெடுத்தே இது போன்ற செயல்களை செய்வதாகவும், தன் மகனிடம் இருந்து அனைத்து சொத்துக்களையும் இவர்கள் அபகரித்துக் கொண்டதாகவும், தன் மகனிடம் இருந்து பணம் இனி பெறமுடியாது என்று அவர்களுக்குத் தோன்றியதை அடுத்து செந்தில் என்பவரின் மூலம் மிரட்டி வருகின்றனர்.
இதுகுறித்து, போலீசாரிடம் புகார் அளித்ததின் அடிப்படையில் அவர்கள் விசாரணை நடத்தித் தன் மகன் மீது எவ்வித தவறும் இல்லை என்று கூறியதை அடுத்து, பொய்யான புகார்களை மோகனப்பிரியா குடும்பத்தினர் கொடுத்து வருகின்றனர் என்றார்.
மேலும், CM CELL- லில் புகார் அளித்தும், அவர்கள் விசாரணையிலும் எனது மகன் எந்த தவறும் செய்யவில்லை என்று ஊர்ஜிதப்படுத்தினர். ஆனாலும், தொடர்ந்து வெளிநாட்டிலுள்ள என் மகனுக்குத் தொடர்ந்து அலைபேசியின் மூலம் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
மேலும், தனது பேரனை என் மகனிடம் காட்ட மறுக்கின்றனர். இதனால், பெரிதும் மனவேதனை அடைந்த என் மகன் தற்கொலை செய்யும் அளவிற்குப் போய்விட்டான் என்று குறிப்பிட்டுள்ள அவர், தன் மகனை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.