போலீசார் விசாரணையில், மனோஜுக்கும், அதேபகுதியைச் சேர்ந்த அப்பாஸ், சபீர் ஆகியோருக்கு இடையே முன்விரோதம் இருந்தது தெரிந்தது.
கோவை: கோவையில் முன்விரோதத்தில் கல்லூரி மாணவர் ஒருவருக்கு கத்திக்குத்து விழுந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
கோவை செல்வபுரம் சுண்டாக்காமுத்தூர் ரோட்டை சேர்ந்தவர் மனோஜ் (21) தனியார் கல்லூரி மாணவர். இவர் நேற்று மனோஜ் செல்வபுரம் என்.எஸ்.கே., தெருவில் தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த இருவர், மனோஜுடன் தகராறில் ஈடுபட்டனர். தகராறு முற்றிய நிலையில், அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனோஜை குத்திவிட்டு தப்பினர்.
இதையடுத்து, காயமடைந்த மனோஜை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதனிடையே, வழக்குபதிவு செய்த செல்வபுரம் போலீசார் விசாரணையில், மனோஜுக்கும், அதேபகுதியை சேர்ந்த அப்பாஸ், சபீர் ஆகியோருக்கு இடையே முன்விரோதம் இருந்தது தெரிந்தது. இதையடுத்து, போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
கோவை செல்வபுரம் சுண்டாக்காமுத்தூர் ரோட்டை சேர்ந்தவர் மனோஜ் (21) தனியார் கல்லூரி மாணவர். இவர் நேற்று மனோஜ் செல்வபுரம் என்.எஸ்.கே., தெருவில் தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த இருவர், மனோஜுடன் தகராறில் ஈடுபட்டனர். தகராறு முற்றிய நிலையில், அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனோஜை குத்திவிட்டு தப்பினர்.
இதையடுத்து, காயமடைந்த மனோஜை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதனிடையே, வழக்குபதிவு செய்த செல்வபுரம் போலீசார் விசாரணையில், மனோஜுக்கும், அதேபகுதியை சேர்ந்த அப்பாஸ், சபீர் ஆகியோருக்கு இடையே முன்விரோதம் இருந்தது தெரிந்தது. இதையடுத்து, போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.