ஈமு கோழி மோசடி வழக்கில் 5 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு..!!

மோசடியில் ஈடுபட்ட 5 பேருக்கும் 55 லட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க உத்தரவிட்டார்.


கோவை: ஈமு கோழி மோசடி வழக்கில் 5 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை டான்பிட் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.

திருப்பூர் மாவட்டம் கே. செட்டிபாளையத்தில் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (53), காவலன் காபி தோட்டம் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி (51), அங்கேரி பாளையத்தைச் சேர்ந்த பெருமாள்ராஜ் (54). அவிநாசி சென்னிமலை கவுண்டன் புதூர் அசோக்குமார் (33), ஆர்.கே. கவுண்டன்புதூரை சேர்ந்தவர் சரவணன் (47) ஆகிய 5 பேரும் சேர்ந்து காவலன் காப்பித் தோட்டம் பகுதியில் கடந்த 2012ம் ஆண்டு ஈமு கோழி வளர்ப்பு பண்ணையை தொடங்கினர்.

இவர்கள் பல்வேறு விதமான கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தனர். இதை நம்பி 22 பேரிடம் 5 பேரும் சேர்ந்து, ரூபாய் 53 லட்சத்து 64 ஆயிரத்து 800 மோசடி செய்தது தெரிய வந்தது.

இது குறித்த வழக்கு கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர் நலன் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ரவி பொதுமக்களிடம் பலத்தைப் பெற்று மோசடி செய்த முத்துக்கிருஷ்ணன், கந்தசாமி, பெருமாள்ராஜ், அசோக்குமார், சரவணன் ஆகிய 5 பேருக்கும் தலா 10- ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும், அவர்களுக்கு தலா ரூபாய் 10 லட்சம் வீதம் ரூபாய் 55 லட்சம் அபராதம் விதித்தார். இதில் முத்துகிருஷ்ணன் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் மாணிக்கராஜ் ஆஜராகி வாதாடினார். அபராத தொகை ரூபாய் 55 லட்சத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...