கிணத்துக்கடவு நெ.10 முத்தூர் ஊராட்சிமன்ற 2வது வார்டு உறுப்பினர் பதவி இடைத்தேர்தல்..!! காலை 9 மணி நிலவரப்படி 2.5% வாக்குப்பதிவு..!

காலை முதல் சாரல் மழை பெய்த காரணத்தால் வாக்குச்சாவடி மையத்திற்கு வாக்காளர்கள் வருகை குறைந்தால் வாக்குச்சாவடி மையம் வெறிச்சோடியது.


கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே நெ.10 முத்தூர் ஊராட்சி மன்ற 2வது வார்டு உறுப்பினர் பதவிக்கான இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மழைகாரணமாக காலை 9 மணி நிலவரப்படி 2.5% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நெ.10 முத்தூர் ஊராட்சிமன்ற 2வது வார்டு உறுப்பினர் பதவி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.



இந்நிலையில், நெ.10 முத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.



ஆனால், காலை முதல் சாரல் மழை பெய்த காரணத்தால் வாக்குச்சாவடி மையத்திற்கு வாக்காளர்கள் வருகை குறைந்ததால் வாக்குச்சாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டது.

வாக்குச்சாவடி மையத்திற்கு வரும் வாக்காளர்களுக்கு கையுறை, வெப்ப பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே வாக்குச்சாவடி மையத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.



மேலும், வாக்குச்சாவடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

மொத்தமுள்ள 381 வாக்காளர்களில் காலை 9 மணி நிலவரப்படி 2.5% வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...