கோவை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது...!

வாக்குச்சாவடிக்கு 200 மீட்டர் தூரத்துக்குள் கூட்டமாக நிற்பதோ, வாக்காளர்கள் வாக்களிக்க வற்புறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. இதை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தார்.


கோவை: கோவை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று தொடங்கியது.

கோவை மாவட்டத்தில் காலியாக உள்ள மாவட்ட ஊராட்சி 3 -வது வார்டு கவுன்சிலர், ஆனைமலை திவான் ஷா புதூர், பொள்ளாச்சி தெற்கு தென் குமாரபாளையம், கிராம ஊராட்சி தலைவர்களின் பதவி, கிராம ஊராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கான பெள்ளாதி 3 -வது வார்டு, தேக்கம்பட்டி 15-ஆவது வார்டு, வெள்ளியங்காடு 10-வது வார்டு, நம்பர் 10 முத்தூர் 2-வது வார்டு சீரபாளையம், 4-வது வார்டு குருடம்பாளையம், 9-வது வார்டு ஜமீன் முத்தூர், 6-வது வார்டு கள்ளிப்பாளையம், 5-வது வார்டு போகம்பட்டி, 6-வது வார்டு மாதம்பட்டி, 3 -வது வார்டு உள்ளிட்ட 13 உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் இன்று நடக்கிறது.

இதில் மொத்தம் 51 பேர் போட்டியிடுகிறார்கள். 77 ஆயிரம் பேர் வாக்களிக்க உள்ளனர். இதற்காக மொத்தம் 128 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 27 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு வெப் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், காலை 7 மணியிலிருந்து மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. ஓட்டுப்பதிவு இருக்கத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வாக்குச் சாவடிகளில் சாமியானா பந்தல், குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

மேலும், வாக்குச்சாவடிக்கு 200 மீட்டர் தூரத்துக்குள் கூட்டமாக நிற்பதோ வாக்காளர்கள் வாக்களிக்க வற்புறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. இதை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...