கோவை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது...!

வாக்குச்சாவடிக்கு 200 மீட்டர் தூரத்துக்குள் கூட்டமாக நிற்பதோ, வாக்காளர்கள் வாக்களிக்க வற்புறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. இதை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தார்.


கோவை: கோவை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று தொடங்கியது.

கோவை மாவட்டத்தில் காலியாக உள்ள மாவட்ட ஊராட்சி 3 -வது வார்டு கவுன்சிலர், ஆனைமலை திவான் ஷா புதூர், பொள்ளாச்சி தெற்கு தென் குமாரபாளையம், கிராம ஊராட்சி தலைவர்களின் பதவி, கிராம ஊராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கான பெள்ளாதி 3 -வது வார்டு, தேக்கம்பட்டி 15-ஆவது வார்டு, வெள்ளியங்காடு 10-வது வார்டு, நம்பர் 10 முத்தூர் 2-வது வார்டு சீரபாளையம், 4-வது வார்டு குருடம்பாளையம், 9-வது வார்டு ஜமீன் முத்தூர், 6-வது வார்டு கள்ளிப்பாளையம், 5-வது வார்டு போகம்பட்டி, 6-வது வார்டு மாதம்பட்டி, 3 -வது வார்டு உள்ளிட்ட 13 உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் இன்று நடக்கிறது.

இதில் மொத்தம் 51 பேர் போட்டியிடுகிறார்கள். 77 ஆயிரம் பேர் வாக்களிக்க உள்ளனர். இதற்காக மொத்தம் 128 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 27 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு வெப் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், காலை 7 மணியிலிருந்து மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. ஓட்டுப்பதிவு இருக்கத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வாக்குச் சாவடிகளில் சாமியானா பந்தல், குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

மேலும், வாக்குச்சாவடிக்கு 200 மீட்டர் தூரத்துக்குள் கூட்டமாக நிற்பதோ வாக்காளர்கள் வாக்களிக்க வற்புறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. இதை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...