கோவை பாரதியார்‌ பல்கலைக்கழக விலங்கியல்‌ துறை சார்பில் வனவிலங்கு வாரவிழா.!!

காடுகளின்‌ முக்கியத்துவம்‌, பழங்குடியினரின்‌ நிலையான வாழ்வாதாரம்‌, விலங்கினங்களின்‌ நலன்‌ மற்றும்‌ அதில்‌ இளந்தலை முறையினரின்‌ பங்கு குறித்து எடுத்துரைக்கப்பட்டது.



கோவை: பாரதியார்‌ பல்கலைக்கழக விலங்கியல்‌ துறை சார்பில்‌, இயற்கை சங்கம்‌ மற்றும்‌ லைஃப் டிரஸ்ட்‌-இந்தியா ஒருங்கிணைந்து, வனவிலங்கு வாரவிழா 08/10/2021 அன்று சிறப்பாகக்‌ கொண்டாடப்பட்டது.

நிகழ்கலையில்‌ நடந்த இவ்விழாவை துணைவேந்தர்‌ டாக்டர்‌. பி. காளிராஜ்‌ தலைமை தாங்கினார்‌. இதில்‌ வனவிலங்கு பாதுகாப்பின்‌ முக்கியத்துவம்‌, வனவிலங்குகளைப்‌ பாதுகாப்பதில்‌ மாணவர்களின்‌ பங்கு ஆகியவற்றைத் துணைவேந்தர்‌ எடுத்துரைத்தார்‌.



இவ்விழாவில்‌ பதிவாளர்‌ டாக்டர்‌. கே. முருகவேல்‌, பல்கலைக்கழகப்‌ பேராசிரியர்கள்‌ மற்றும்‌ நூற்றுக்கும்‌ மேற்பட்ட மாணவ, மாணவிகள்‌ பங்கேற்றனர்‌. விலங்கியல்‌ துறைத்தலைவர்‌ டாக்டர்‌. மா. ரமேஷ்‌ வரவேற்புரை வழங்கினார்‌.



வனவிலங்கு வாரத்தின்‌ முக்கியத்துவம்‌ பற்றி டாக்டர்‌. சி. குணசேகரன் உரையாற்றினார்‌.



அதனைத்‌ தொடர்ந்து, லைஃப் டிரஸ்ட்‌-இந்தியாவின்‌ ஆராய்ச்சி இயக்குனர்‌ டாக்டர்‌. பி.ஏ. டேனியல்‌ அவர்கள்‌ சிறப்புரையாற்றினார்‌.

இதில்‌ காடுகளின்‌ முக்கியத்துவம்‌, பழங்குடியினரின்‌ நிலையான வாழ்வாதாரம்‌, விலங்கினங்களின்‌ நலன்‌ மற்றும்‌ அதில்‌ இளந்தலை முறையினரின்‌ பங்கு குறித்து விரிவுரையாற்றினார்‌.

இவ்விழாவினை இரண்டாம்‌ ஆண்டு விலங்கியல்‌ துறை மாணவிகள்‌, துர்கா மற்றும்‌ ரோஷன்‌ சபிஹா தொகுத்து வழங்கினர்‌. இறுதியாக, இயற்கை சங்கத்தின்‌ தலைவர்‌, மாணவர்‌ ச.கரண்‌ நன்றியுரை வழங்கினார்‌.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...