கோவையில் பணியாற்றிவந்த சப் இன்ஸ்பெக்டர் முருகன் என்பவர் மருத்துவ விடுப்பிலிருந்த போது, செக் மோசடியில் ஈடுபட்டதால் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளார். இதைத்தொடர்ந்து இன்று கோவை சரக டிஐஜி முத்துசாமி அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
கோவை: கோவையில் பணியாற்றிவந்த சப் இன்ஸ்பெக்டர் முருகன் என்பவர் மருத்துவ விடுப்பிலிருந்த போது, செக் மோசடியில் ஈடுபட்டதால் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளார். இதைத்தொடர்ந்து இன்று கோவை சரக டிஐஜி முத்துசாமி அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
தொடரும் காவல்துறை அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கை.
கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வந்த முருகன் என்பவர் மீது கடந்த 22.09.2021 ஆம் தேதி சென்னை புரசைவாக்கம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கிளை மேலாளராகப் பணி புரிந்துவரும் அமித்குமார் என்பவர் கொடுத்த செக் மோசடி புகாரின் பேரில் சென்னை G3 கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சார்பு ஆய்வாளர் முருகன் என்பவர் 6 -வது எதிரியாக கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார்.
மேற்படி சார்பு ஆய்வாளர் மருத்துவ விடுப்பிலிருந்தபோது இந்த குற்ற செயலில் ஈடுபட்டுள்ளார். இச்செயலுக்காகக் கோவை சரக துணைத் தலைவர் (DIG)அவர்களின் ஆணையின் படி சார்பு ஆய்வாளர் முருகன் என்பவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இன்று (08.10.2021) பணியிடை நீக்கம்(Suspension) செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பணியாற்றிவரும் காவல் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நேற்று முன்தினம் பொருளாதார குற்றப்பிரிவில் குற்றவாளிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்ட கலையரசி இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடரும் காவல்துறை அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கை.
கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வந்த முருகன் என்பவர் மீது கடந்த 22.09.2021 ஆம் தேதி சென்னை புரசைவாக்கம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கிளை மேலாளராகப் பணி புரிந்துவரும் அமித்குமார் என்பவர் கொடுத்த செக் மோசடி புகாரின் பேரில் சென்னை G3 கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சார்பு ஆய்வாளர் முருகன் என்பவர் 6 -வது எதிரியாக கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார்.
மேற்படி சார்பு ஆய்வாளர் மருத்துவ விடுப்பிலிருந்தபோது இந்த குற்ற செயலில் ஈடுபட்டுள்ளார். இச்செயலுக்காகக் கோவை சரக துணைத் தலைவர் (DIG)அவர்களின் ஆணையின் படி சார்பு ஆய்வாளர் முருகன் என்பவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இன்று (08.10.2021) பணியிடை நீக்கம்(Suspension) செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பணியாற்றிவரும் காவல் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நேற்று முன்தினம் பொருளாதார குற்றப்பிரிவில் குற்றவாளிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்ட கலையரசி இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.