செக்மோசடி வழக்கில் ஈடுபட்ட சப் இன்ஸ்பெக்டர் முருகன் சஸ்பெண்ட்- டிஐஜி நடவடிக்கை.!!

கோவையில் பணியாற்றிவந்த சப் இன்ஸ்பெக்டர் முருகன் என்பவர் மருத்துவ விடுப்பிலிருந்த போது, செக் மோசடியில் ஈடுபட்டதால் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளார். இதைத்தொடர்ந்து இன்று கோவை சரக டிஐஜி முத்துசாமி அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.


கோவை: கோவையில் பணியாற்றிவந்த சப் இன்ஸ்பெக்டர் முருகன் என்பவர் மருத்துவ விடுப்பிலிருந்த போது, செக் மோசடியில் ஈடுபட்டதால் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளார். இதைத்தொடர்ந்து இன்று கோவை சரக டிஐஜி முத்துசாமி அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

தொடரும் காவல்துறை அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கை.

கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வந்த முருகன் என்பவர் மீது கடந்த 22.09.2021 ஆம் தேதி சென்னை புரசைவாக்கம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கிளை மேலாளராகப் பணி புரிந்துவரும் அமித்குமார் என்பவர் கொடுத்த செக் மோசடி புகாரின் பேரில் சென்னை G3 கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சார்பு ஆய்வாளர் முருகன் என்பவர் 6 -வது எதிரியாக கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார்.

மேற்படி சார்பு ஆய்வாளர் மருத்துவ விடுப்பிலிருந்தபோது இந்த குற்ற செயலில் ஈடுபட்டுள்ளார். இச்செயலுக்காகக் கோவை சரக துணைத் தலைவர் (DIG)அவர்களின் ஆணையின் படி சார்பு ஆய்வாளர் முருகன் என்பவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இன்று (08.10.2021) பணியிடை நீக்கம்(Suspension) செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பணியாற்றிவரும் காவல் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நேற்று முன்தினம் பொருளாதார குற்றப்பிரிவில் குற்றவாளிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்ட கலையரசி இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...