கோவையில் எஞ்சினியர் வீட்டின் கதவை உடைத்து 64-பவுன் நகை, ரூ.90-ஆயிரம் பணம் கொள்ளை.!!

எஞ்சினியர் வீட்டின் கதவை உடைத்து 64-பவுன் நகை, ரூ.90-ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.


கோவை: எஞ்சினியர் வீட்டின் கதவை உடைத்து 64-பவுன் நகை, ரூ.90-ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

கோவை பீளமேடு அருகே உள்ள சிவராம் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது-44), இவர் சிங்கப்பூரில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். கொரோனா பரவல் காரணமாகக் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கோவைக்குத் திரும்பி அவர் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

சுரேஷ் குடும்பத்துடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்குச் செல்ல திட்டமிட்டார். அதன்படி கடந்த 2-ஆம் தேதி வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்துடன் திருவண்ணாமலைக்குப் புறப்பட்டார்.

அப்போது அவரது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே நுழைந்தனர். பின்னர் அறையிலிருந்த பீரோவைத் திறந்து அதிலிருந்த செயின், மோதிரம், கம்மல், கை செயின், வளையல், உட்பட 64-பவுன் தங்க நகைகளை மற்றும் 90-ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றைக் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றனர்.

சாமி தரிசனத்தை முடித்துக் கொண்டு இன்று காலை வீட்டிற்குத் திரும்பிய சுரேஷ் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அறையின் பீரோவிலிருந்த நகைகள் மற்றும் பணம் கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சுரேஷ் பீளமேடு போலீசில் தகவல் தெரிவித்தார்.

உடனடியாக இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகியிருந்த கொள்ளையர்களின் கைரேகைகளைப் பதிவு செய்தனர்.

இதனை வைத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து என்ஜினீயர் வீட்டின் கதவை உடைத்து 64-பவுன் தங்க நகைகள் 90-ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.

மேலும் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்களில் வந்து செல்லும் காட்சி பதிவாகி உள்ளதா என ஆய்வு செய்து வருகின்றனர்.

கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்ற என்ஜினீயர் வீட்டில் கொள்ளையர்கள் நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...