விவசாயிகளின் உள் உணர்வுகளை உள்வாங்க மறுத்து மத்திய அரசு புறந்தள்ளி வருவது வேதனையான ஒன்று, நாட்டு மக்கள் மற்றும் விவசாயிகளின் உணர்வுகளை மதிக்காமல் இருப்பது மோடி ஆட்சியில் தான். இது துரதிர்ஷ்டவசமானது.
பொள்ளாச்சி: நாட்டு மக்களின் உணர்வுகளைப் புறம் தள்ளி வரும் மோடி ஆட்சி துரதிர்ஷ்டவசமானது என தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி ஐக்கிய ஜமாத் மற்றும் எக்னாமிக் சேம்பர் இணைந்து நடத்திய இஸ்லாமியப் பெண்களுக்கான அரசு உதவிகள் வழங்கும் விழா மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் கலந்து கொண்டு இஸ்லாமிய பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது சட்டத்துக்குப் புறம்பாக ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்கப்பட்டு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கும் தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், வேளாண் சட்டங்களுக்கு எதிராகக் கடந்த ஒரு வருடமாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாயிகளின் உள் உணர்வுகளை உள்வாங்க மறுத்து மத்திய அரசு புறந்தள்ளி வருவது வேதனையான ஒன்று, நாட்டு மக்கள் மற்றும் விவசாயிகளின் உணர்வுகளை மதிக்காமல் இருப்பது மோடி ஆட்சியில் தான். இது துரதிர்ஷ்டவசமானது.
ஜனநாயக ரீதியில் போராடும் விவசாயிகள் மீது வாகனங்களை ஏற்றிக்கொல்வதும், தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் கண்டிக்கத்தக்கது. உத்தரப் பிரதேச பாஜக அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் இதுதான் ஜனநாயக மரபு என்றும் தமிழகத்திற்கு நீட்தேர்வு பொருந்தாத ஒன்று ஏழை எளிய மாணவர்கள் பிளஸ் டூ தேர்வில் நல்ல மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கும் நீட்தேர்வு கடினமானது.
இந்த உண்மை தெரிந்தும் மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்யவில்லை. மத்திய அரசு மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு மக்களுக்கு ஏற்ற வகையில் ஆட்சி நடத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
பொள்ளாச்சி ஐக்கிய ஜமாத் மற்றும் எக்னாமிக் சேம்பர் இணைந்து நடத்திய இஸ்லாமியப் பெண்களுக்கான அரசு உதவிகள் வழங்கும் விழா மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் கலந்து கொண்டு இஸ்லாமிய பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது சட்டத்துக்குப் புறம்பாக ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்கப்பட்டு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கும் தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், வேளாண் சட்டங்களுக்கு எதிராகக் கடந்த ஒரு வருடமாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாயிகளின் உள் உணர்வுகளை உள்வாங்க மறுத்து மத்திய அரசு புறந்தள்ளி வருவது வேதனையான ஒன்று, நாட்டு மக்கள் மற்றும் விவசாயிகளின் உணர்வுகளை மதிக்காமல் இருப்பது மோடி ஆட்சியில் தான். இது துரதிர்ஷ்டவசமானது.
ஜனநாயக ரீதியில் போராடும் விவசாயிகள் மீது வாகனங்களை ஏற்றிக்கொல்வதும், தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் கண்டிக்கத்தக்கது. உத்தரப் பிரதேச பாஜக அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் இதுதான் ஜனநாயக மரபு என்றும் தமிழகத்திற்கு நீட்தேர்வு பொருந்தாத ஒன்று ஏழை எளிய மாணவர்கள் பிளஸ் டூ தேர்வில் நல்ல மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கும் நீட்தேர்வு கடினமானது.
இந்த உண்மை தெரிந்தும் மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்யவில்லை. மத்திய அரசு மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு மக்களுக்கு ஏற்ற வகையில் ஆட்சி நடத்த வேண்டும் என்று தெரிவித்தார்.