பாஜக ஒன்றிய அமைச்சரின் மகனை கைது செய்யக்கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்.!!

நியாயம் கேட்ட விவசாயிகள் மீது காரை ஏற்றி கொல்வதா? என கூறி பாஜக ஒன்றிய அமைச்சரின் மகனை கைது செய்யக்கோரி சிபிஎம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: நியாயம் கேட்ட விவசாயிகள் மீது காரை ஏற்றி கொல்வதா? என பாஜக ஒன்றிய அமைச்சரின் மகனை கைது செய்யக்கோரி சிபிஎம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசின் வேளாண் விரோத சட்டத்திற்கு எதிரான நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காரை ஏற்றி கொடூர கொலை செய்த ஒன்றிய அமைச்சரின் மகனைக் கைது செய்ய வலியுறுத்தி கோவையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆவேச ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உத்திர பிரதேச மாநில லக்கீம்பூரில் விவசாயிகள் மீது கொடூரமாக கார் ஏற்றி படுகொலை செய்த பாஜக ஒன்றிய அமைச்சர் மகன் உள்ளிட்ட சமூக விரோதிகளைக் கைது செய்ய வலியுறுத்தி கோவையில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை சிவானந்தகாலனி பவர்ஹவுஸ் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் வி.இராம மூர்த்தி தலைமை தாங்கினார்.



இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாநிலக்குழு உறுப்பினர்கள் சி.பத்மநாபன், ஏ.ராதிகா உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், ஒன்றிய அரசு உடனடியாக மூன்று வேளாண் விரோத சட்டங்களைத்திரும்பப் பெற வேண்டும், பலியான விவசாயிகளின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் தர வேண்டும். படுகொலைக்குக் காரணமான ஒன்றிய அமைச்சரின் மகன் உள்ளிட்ட சமூக விரோதிகள் கைது செய்யப்பட வேண்டும்.

கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக இந்திய விவசாயிகளைப் பலி காடாக்காதே உள்ளிட்ட கோரிக்கைகளை முழக்கங்களாக எழுப்பினர். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...