நியாயம் கேட்ட விவசாயிகள் மீது காரை ஏற்றி கொல்வதா? என கூறி பாஜக ஒன்றிய அமைச்சரின் மகனை கைது செய்யக்கோரி சிபிஎம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: நியாயம் கேட்ட விவசாயிகள் மீது காரை ஏற்றி கொல்வதா? என பாஜக ஒன்றிய அமைச்சரின் மகனை கைது செய்யக்கோரி சிபிஎம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசின் வேளாண் விரோத சட்டத்திற்கு எதிரான நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காரை ஏற்றி கொடூர கொலை செய்த ஒன்றிய அமைச்சரின் மகனைக் கைது செய்ய வலியுறுத்தி கோவையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆவேச ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உத்திர பிரதேச மாநில லக்கீம்பூரில் விவசாயிகள் மீது கொடூரமாக கார் ஏற்றி படுகொலை செய்த பாஜக ஒன்றிய அமைச்சர் மகன் உள்ளிட்ட சமூக விரோதிகளைக் கைது செய்ய வலியுறுத்தி கோவையில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை சிவானந்தகாலனி பவர்ஹவுஸ் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் வி.இராம மூர்த்தி தலைமை தாங்கினார்.
இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாநிலக்குழு உறுப்பினர்கள் சி.பத்மநாபன், ஏ.ராதிகா உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், ஒன்றிய அரசு உடனடியாக மூன்று வேளாண் விரோத சட்டங்களைத்திரும்பப் பெற வேண்டும், பலியான விவசாயிகளின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் தர வேண்டும். படுகொலைக்குக் காரணமான ஒன்றிய அமைச்சரின் மகன் உள்ளிட்ட சமூக விரோதிகள் கைது செய்யப்பட வேண்டும்.
கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக இந்திய விவசாயிகளைப் பலி காடாக்காதே உள்ளிட்ட கோரிக்கைகளை முழக்கங்களாக எழுப்பினர். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.