கோவை மாவட்டம் சிறுமுகை அருகே பவானி ஆற்றில் பரிசலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவரைத் தண்ணீருக்குள் விரட்டிய யானைகளின் வீடியோ தற்போது சமூக வலயதலங்களில் வைரலாகி வருகிறது.
கோவை: கோவை மாவட்டம் சிறுமுகை அருகே பவானி ஆற்றில் பரிசலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவரைத் தண்ணீருக்குள் விரட்டிய யானைகளின் வீடியோ தற்போது சமூக வலயதலங்களில் வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டம் சிறுமுகை பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக 12 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. வனப்பகுதியிலிருந்து மாலை நேரத்தில் வெளியேறும் அந்த யானை கூட்டம் அருகிலுள்ள வாழை தோட்டங்களில் வாழைகளைச் சேதப்படுத்துவது, பின்னர் அங்குள்ள பவானி ஆற்று நீரில் குளித்து மகிழ்வதும் என கடந்த 3 நாட்களாக யானைகளின் நடமாட்டம் லிங்காபுரம் பகுதியில் தொடர்ந்து இருந்து வருகிறது.
இந்நிலையில், இன்று காலை பவானி ஆற்றில் குளித்து விளையாடிய யானைகள், அங்கு மீன்பிடிக்கப் பரிசலில் சென்ற மீனவர் ஒருவரை தண்ணீரில் விரட்டிய நிகழ்வு அங்கிருந்த மக்களை ஆச்சியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து சிறுமுகை வனத்துறையினர் கூறுகையில், விஸ்கோஸ் ஆலையில் முகாமிட்டுள்ள 12 யானைகள், மாலை மற்றும், அதிகாலை நேரத்திலும் அங்கிருந்து வெளியேறி விவசாய நிலங்களுக்குள் சுற்றி திரிகிறது.
மேலும், பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு மேல் உள்ளதால், யானைகள் வனப் பகுதிக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தண்ணீர் குறையும் வரை இந்த யானைக் கூட்டம் இங்கே தான் இருக்கும் என்பதால், அப்பகுதி வழியாகச் செல்லும் பொது மக்கள் அனைவரும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும், என்று எச்சரித்துள்ளனர்.