பவானி ஆற்றில் மீனவரை தண்ணீருக்குள் விரட்டிய யானைகளின் வீடியோ வைரல்.!!

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே பவானி ஆற்றில் பரிசலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவரைத் தண்ணீருக்குள் விரட்டிய யானைகளின் வீடியோ தற்போது சமூக வலயதலங்களில் வைரலாகி வருகிறது.



கோவை: கோவை மாவட்டம் சிறுமுகை அருகே பவானி ஆற்றில் பரிசலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவரைத் தண்ணீருக்குள் விரட்டிய யானைகளின் வீடியோ தற்போது சமூக வலயதலங்களில் வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டம் சிறுமுகை பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக 12 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. வனப்பகுதியிலிருந்து மாலை நேரத்தில் வெளியேறும் அந்த யானை கூட்டம் அருகிலுள்ள வாழை தோட்டங்களில் வாழைகளைச் சேதப்படுத்துவது, பின்னர் அங்குள்ள பவானி ஆற்று நீரில் குளித்து மகிழ்வதும் என கடந்த 3 நாட்களாக யானைகளின் நடமாட்டம் லிங்காபுரம் பகுதியில் தொடர்ந்து இருந்து வருகிறது.



இந்நிலையில், இன்று காலை பவானி ஆற்றில் குளித்து விளையாடிய யானைகள், அங்கு மீன்பிடிக்கப் பரிசலில் சென்ற மீனவர் ஒருவரை தண்ணீரில் விரட்டிய நிகழ்வு அங்கிருந்த மக்களை ஆச்சியத்தில் ஆழ்த்தியுள்ளது.



இதுகுறித்து சிறுமுகை வனத்துறையினர் கூறுகையில், விஸ்கோஸ் ஆலையில் முகாமிட்டுள்ள 12 யானைகள், மாலை மற்றும், அதிகாலை நேரத்திலும் அங்கிருந்து வெளியேறி விவசாய நிலங்களுக்குள் சுற்றி திரிகிறது.

மேலும், பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு மேல் உள்ளதால், யானைகள் வனப் பகுதிக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தண்ணீர் குறையும் வரை இந்த யானைக் கூட்டம் இங்கே தான் இருக்கும் என்பதால், அப்பகுதி வழியாகச் செல்லும் பொது மக்கள் அனைவரும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும், என்று எச்சரித்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...