பொள்ளாச்சியில் நவராத்திரி விழாவில் 8 மணிநேரம் பம்பை உடுக்கை அடித்து நாட்டுப்புறக் கலைஞர்கள் சாதனை.!!

பொள்ளாச்சியில் தொடர்ந்து 8-மணி நேரம் பம்பை, உடுக்கை அடித்து நாட்டுப்புறப் பாடல்கள் பாடி நாட்டுப்புற கலைஞர்கள் நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றனர்.


பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் தொடர்ந்து 8-மணி நேரம் பம்பை, உடுக்கை அடித்து நாட்டுப்புறப் பாடல்கள் பாடி நாட்டுப்புற கலைஞர்கள் நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றனர்.

நவராத்திரி விழாவை முன்னிட்டு அழிந்து வரும் நாட்டுப்புறக் கலைகளை மீட்டெடுக்கும் வகையில் பொள்ளாச்சி அடுத்த ரமணமுதலிபுதூர் பகுதியில் உள்ள மகுடேஸ்வரி திருக்கோவிலில் பம்பை மற்றும் உடக்கை கலைஞர்களின் 8 மணி நேரம் தொடர்ந்து பம்பை, உடுக்கை நாட்டுப்புறப்பாடல் பாடும் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்த உலக சாதனை நிகழ்ச்சியில் 26-நாட்டுப்புற கலைஞர்கள் கலந்து கொண்டு கருப்புசாமி, சிவன், பார்வதி சாமி வேடமிட்டு பம்பை மற்றும் உடுக்கை கலைஞர்கள் தொடர்ந்து இடைவிடாது 8-மணி நேரம் நாட்டுப்புற பக்தி பாடல்கள் பாடி நோபல் உலக சாதனை ஈடுபட்டனர்.

இதில் நோபல் உலக சாதனை புத்தகம் பதிப்பாசிரியர் தியாகு நாகராஜன் கலந்து கொண்டு கண்காணித்து வந்தார்.

தொடர்ந்து காலை 9-மணி முதல் மாலை 5-மணி வரை இடைவிடாது நாட்டுப்புற கலைஞர்கள் பம்பை, உடுக்கை வாசித்து நோபல் நிறுவனம் புத்தகத்தில் இடம் பெற்றனர்.



மேலும் இந்த சாதனையில் பங்கேற்ற நாட்டுப்புற கலைஞர்களுக்குப் பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக நாட்டுப்புற கலைஞர்கள் வாழ்வாதாரம் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே இதுபோன்ற சாதனை நிகழ்ச்சி நடத்தி நாட்டுப்புற கலைஞர்களை ஊக்குவிக்க உதவியாக இருப்பதாகவும், தமிழக அரசு நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...