பொள்ளாச்சியில் தொடர்ந்து 8-மணி நேரம் பம்பை, உடுக்கை அடித்து நாட்டுப்புறப் பாடல்கள் பாடி நாட்டுப்புற கலைஞர்கள் நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றனர்.
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் தொடர்ந்து 8-மணி நேரம் பம்பை, உடுக்கை அடித்து நாட்டுப்புறப் பாடல்கள் பாடி நாட்டுப்புற கலைஞர்கள் நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றனர்.
நவராத்திரி விழாவை முன்னிட்டு அழிந்து வரும் நாட்டுப்புறக் கலைகளை மீட்டெடுக்கும் வகையில் பொள்ளாச்சி அடுத்த ரமணமுதலிபுதூர் பகுதியில் உள்ள மகுடேஸ்வரி திருக்கோவிலில் பம்பை மற்றும் உடக்கை கலைஞர்களின் 8 மணி நேரம் தொடர்ந்து பம்பை, உடுக்கை நாட்டுப்புறப்பாடல் பாடும் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த உலக சாதனை நிகழ்ச்சியில் 26-நாட்டுப்புற கலைஞர்கள் கலந்து கொண்டு கருப்புசாமி, சிவன், பார்வதி சாமி வேடமிட்டு பம்பை மற்றும் உடுக்கை கலைஞர்கள் தொடர்ந்து இடைவிடாது 8-மணி நேரம் நாட்டுப்புற பக்தி பாடல்கள் பாடி நோபல் உலக சாதனை ஈடுபட்டனர்.
இதில் நோபல் உலக சாதனை புத்தகம் பதிப்பாசிரியர் தியாகு நாகராஜன் கலந்து கொண்டு கண்காணித்து வந்தார்.
தொடர்ந்து காலை 9-மணி முதல் மாலை 5-மணி வரை இடைவிடாது நாட்டுப்புற கலைஞர்கள் பம்பை, உடுக்கை வாசித்து நோபல் நிறுவனம் புத்தகத்தில் இடம் பெற்றனர்.

மேலும் இந்த சாதனையில் பங்கேற்ற நாட்டுப்புற கலைஞர்களுக்குப் பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக நாட்டுப்புற கலைஞர்கள் வாழ்வாதாரம் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே இதுபோன்ற சாதனை நிகழ்ச்சி நடத்தி நாட்டுப்புற கலைஞர்களை ஊக்குவிக்க உதவியாக இருப்பதாகவும், தமிழக அரசு நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
நவராத்திரி விழாவை முன்னிட்டு அழிந்து வரும் நாட்டுப்புறக் கலைகளை மீட்டெடுக்கும் வகையில் பொள்ளாச்சி அடுத்த ரமணமுதலிபுதூர் பகுதியில் உள்ள மகுடேஸ்வரி திருக்கோவிலில் பம்பை மற்றும் உடக்கை கலைஞர்களின் 8 மணி நேரம் தொடர்ந்து பம்பை, உடுக்கை நாட்டுப்புறப்பாடல் பாடும் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த உலக சாதனை நிகழ்ச்சியில் 26-நாட்டுப்புற கலைஞர்கள் கலந்து கொண்டு கருப்புசாமி, சிவன், பார்வதி சாமி வேடமிட்டு பம்பை மற்றும் உடுக்கை கலைஞர்கள் தொடர்ந்து இடைவிடாது 8-மணி நேரம் நாட்டுப்புற பக்தி பாடல்கள் பாடி நோபல் உலக சாதனை ஈடுபட்டனர்.
இதில் நோபல் உலக சாதனை புத்தகம் பதிப்பாசிரியர் தியாகு நாகராஜன் கலந்து கொண்டு கண்காணித்து வந்தார்.
தொடர்ந்து காலை 9-மணி முதல் மாலை 5-மணி வரை இடைவிடாது நாட்டுப்புற கலைஞர்கள் பம்பை, உடுக்கை வாசித்து நோபல் நிறுவனம் புத்தகத்தில் இடம் பெற்றனர்.
மேலும் இந்த சாதனையில் பங்கேற்ற நாட்டுப்புற கலைஞர்களுக்குப் பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக நாட்டுப்புற கலைஞர்கள் வாழ்வாதாரம் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே இதுபோன்ற சாதனை நிகழ்ச்சி நடத்தி நாட்டுப்புற கலைஞர்களை ஊக்குவிக்க உதவியாக இருப்பதாகவும், தமிழக அரசு நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.