கோவையில் 67-வது வன உயிரின வார நிறைவு விழா.!!

கோவை மாவட்டம்‌, வனவளாகத்தில்‌ அமைந்துள்ள தமிழ்நாடு வனஉயர்‌ பயிற்சியக நூற்றாண்டு விழா அரங்கில்‌ இன்று 67-வது வன உயிரின வார நிறைவு விழா நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்டம்‌, வனவளாகத்தில்‌ அமைந்துள்ள தமிழ்நாடு வனஉயர்‌ பயிற்சியக நூற்றாண்டு விழா அரங்கில்‌ 08.10.2021 அன்று 67-வது வன உயிரின வார நிறைவு விழா நடைபெற்றது.



இவ்விழாவில்‌ சிறப்பு விருந்தினராக தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன்‌, கலந்து விழா பேருரையாற்றி சிறப்பித்ததோடு மாநில மற்றும்‌ மாவட்ட அளவிலான பல்வேறு போட்டிகளில்‌ வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள்‌ வழங்கி சிறப்பித்தார்‌.

இவ்விழாவிற்குக் கூடுதல்‌ முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும்‌ இயக்குநர்‌, தமிழ்நாடு வனஉயர்‌ பயிற்சியகம்‌, கோவை.T.V மஞ்சுநாதா, வரவேற்புரை ஆற்றினார்‌. மேலும்‌ கோவை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ டாக்டா்‌ G.S சமீரன்‌, முன்னிலை உரையாற்றினார்‌. முனைவர்‌ சேகர்‌ குமார்‌ நீரஜ்‌, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும்‌ தலைமை வனஉயிரினக்‌ காப்பாளர்‌ விளக்கவுரை ஆற்றினார்‌.

விழாவில்‌ கோவை பாராளுமன்ற மக்களவை உறுப்பினர்‌ P.R நடராஜன்‌, பொள்ளாச்சி பாராளுமன்ற மக்களவை உறுப்பினர்‌ K.சண்முகசுந்தரம்‌, கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர்‌ அம்மன்‌, K.அர்ச்சுணன்,‌ முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும்‌ தலைவர்‌ அரசு ரப்பா கழகம் சையத்‌ முஜம்மில்‌ அப்பாஸ்‌, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (ஆராய்ச்சி மற்றும்‌ கல்வி) S.யுவராஜ்‌, மற்றும்‌ முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும்‌ தலைவர் தமிழ்நாடு வனத்தோட்டக்கழகம், யோகேஷ்‌ திவேதி, ஆகியோர்‌ வாழ்த்துரை வழங்கினார்‌.

முதன்மை தலைமை வனப்பாதுகாவலர்‌ (துறைத்தலைவர்‌) ௮சோக்‌ உபரேதி, விழாவிற்குத் தலைமையேற்று தலைமையும் ஆற்றினார்‌.



இவ்விழாவில்‌ தமிழக வனத்துறையில்‌ பணியாற்றும்‌ உயர்‌ அலுவலர்கள்‌, களப்பணியாளர்கள்‌, அனைத்து நிலை பணியாளர்கள்‌, வன ஆர்வலர்கள்‌, மாணவ, மாணவியர்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ ஆகியோர்‌ கலந்து கொண்டனர்‌.



இவ்விழாவில்‌ ஒரு அங்கமாகக் கோவை வனக்கோட்டத்தின்‌ சின்னம்‌ (MASCOT)வனத்துறை அமைச்சரால்‌ வெளியிடப்பட்டு, மாநில அளவிலான ஓவியம்‌ வரைதல்‌, சின்னம்‌ (logo) உவமைக்கும்‌ போட்டிகளில்‌ வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து விழிப்புணர்வு நாடகம்‌, இருளர் ஆதிவாசி பழங்குடி மக்களின்‌ நடன நிகழ்ச்சி மற்றும்‌ யானை விழிப்புணர்வு பாடல்‌ ஆகிய கலை நிகழ்ச்சிகளுடன்‌ வன உயிரின வார நிறைவு நாள்‌ விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவின்‌ இறுதியாகக் கோவை மாவட்ட வன அலுவலர்‌ T.K.அசோக்குமார்‌, நன்றியுரை கூறி தேசிய கீதத்துடன்‌ விழா நிறைவடைந்தது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...