கோவை விமான நிலையத்தில் செப்டம்பர் மாதம் 798 டன் கார்கோ கையாளப்பட்டுள்ளது. தொழில்துறை இயந்திரங்கள், தங்க கட்டிகள் அதிகளவு புக்கிங்.!!!

விமான சேவைகள் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதால், செப்டம்பர் மாதம் உள்நாட்டுப் பிரிவில் 690 டன் கார்கோ கையாளப்பட்டுள்ளது. இதில், தொழில்துறை இயந்திரங்கள், தங்க கட்டிகள் அதிகளவு உள்ளது குறிப்பிடத்தக்கது.


கோவை: கோவை விமான நிலையத்தில் செப்டம்பர் மாதம் 798 டன் கார்கோ கையாளப்பட்டுள்ளது. உள்நாட்டுப் பிரிவில் தொழில்துறை இயந்திரங்கள், தங்க கட்டிகள் அதிகளவு புக்கிங் செய்யப்படுகின்றன, என்று விமானநிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பு, கோவை சர்வதேச விமான நிலையத்தில் மாதம்தோறும் ஆயிரம் டன் எடையிலான கார்கோ கையாளப்படும். இதில் உள்நாட்டு போக்குவரத்து பிரிவில், 800 டன் மற்றும் வெளிநாட்டுப் போக்குவரத்து பிரிவில் 200 டன் உள்ளடங்கும்.

இந்த நிலையில், கொரோனா நோய் தொற்று பரவலுக்குப் பின், விமானங்கள் இயக்கம் மற்றும் கார்கோ கையாளும் அளவு கணிசமாகப் பாதிக்கப்பட்டது. தற்போது, விமான சேவைகள் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதால், தினமும் இயக்கப்படும் விமானங்கள் எண்ணிக்கையும், கையாளப்படும் கார்கோ அளவும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது.

இதுகுறித்து விமானநிலைய வட்டாரங்கள் கூறியதாவது:-

கோவை விமான நிலையத்தில் செப்டம்பர் மாதம் மட்டும், உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் 690 டன் மற்றும் வெளிநாட்டு போக்குவரத்து பிரிவில் 108 டன், என மொத்தம் 798 டன் கார்கோ கையாளப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில், சர்வதேச போக்குவரத்து பிரிவில், அதே 108 டன் எடையிலான கார்கோ மட்டுமே கையாளப்பட்டுள்ளது. ஆனால், உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் ஆகஸ்ட் மாதம் 566 டன் கார்கோ கையாளப்பட்டுள்ள நிலையில், செப்டம்பர் மாதம் 690, என 124 டன் கார்கோ அதிக கையாளப்பட்டுள்ளது.

உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் வழக்கமாக அனுப்பப்படும் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் மட்டுமன்றி, தற்போது தொழில்துறை சார்ந்த பல்வேறு இயந்திரங்கள், உதிரிப்பாகங்கள் மற்றும் தங்க கட்டிகள், அதிக அளவு கையாளப்படுகின்றன. இதுவே, உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் மாதம்தோறும், அதிக எடையிலான கார்கோ கையாளப்படுவதற்குக் காரணமாகும்.

சர்வதேச போக்குவரத்து பிரிவில் தற்போது ஷார்ஜாவுக்கு மட்டுமே கோவையிலிருந்து நேரடி விமான சேவை வழங்கப்படுகிறது.

இவ்வாறு, விமானநிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...