கோவை மாநகராட்சி மேற்கு மண்டல பகுதிகளில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ நேரில்‌ ஆய்வு.!

மருதமலை பிரதான சாலையில்‌ ஏற்படுத்தப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு குறித்து ஆணையாளர்‌ ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து நடவடிக்கையை அறிவுறுத்தினார்‌.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மேற்கு/ மண்டல பகுதிகளில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இன்று (07.10.2021) நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி வடவள்ளியில்‌ மாநகராட்சி பேருந்து நிலையம்‌ அருகில்‌ வாரச்சந்தை அமைத்து சாலையின்‌ பெரும்பகுதியைப் பயன்படுத்தியதால்‌ போக்குவரத்திற்கு நெரிசல்‌ ஏற்பட்டுள்ளது என்று சாலை பாதுகாப்பு கூட்டத்தில்‌ வரப்பெற்ற கோரிக்கையினைத்‌ தொடர்ந்து, வாரச்சந்தை நடத்த மாற்று இடம்‌ அமைப்பதற்கு ஆணையாளர்‌‌ கள ஆய்வு மேற்கொண்டார்‌.



தொடர்ந்து, மருதமலை பிரதான சாலையில்‌ அமைந்துள்ள சிவாஞ்சலி மற்றும்‌ தனியார்‌ கேஸ்‌ சூடோன்‌ அருகில்‌ பிரதான சாலையை ஆக்கிரமிப்பு செய்துள்ளதால்‌, விபத்துகள்‌ ஏற்படுவதாகச் சாலைகள்‌ பாதுகாப்பு கூட்டத்தில்‌ வரப்பெற்ற கோரிக்கையினைத்‌ தொடர்ந்து, பிரதான சாலையில்‌ ஏற்படுத்தப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு குறித்து ஆணையாளர்‌ ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து நடவடிக்கையை அறிவுறுத்தினார்‌.



தொடர்ந்து மருதமலை பிரதான சாலையில்‌ வேளாண்‌ பல்கலைக்கழகம்‌ அருகில்‌ திட்ட சாலை விரிவாக்கம்‌ குறித்து ஆய்வு மேற்கொண்ட பின்னர், வார்டு எண்‌.14, வேலாண்டிபாளையம்‌ கோவில்‌ மேட்டில்‌ கழிவு நீர்‌ ஊருக்குள்‌ வருவதாக வந்த புகாரினைத்‌ தொடர்ந்து, அவ்விடத்தைப் பார்வையிட்ட ஆணையாளர்‌ வாய்க்காலைத் தூர்வாரி சுத்தப்படுத்திக் கழிவு சீராக செல்ல சரிசெய்திடுமாறு அலுவலர்களுக்கு

உதிரவிட்ட பின்னர்,



வடவள்ளி பேருந்து நிலையத்தில்‌ ஆய்வு மேற்கொண்டபின்‌, வார்டு எண்‌.24க்குட்பட்ட காந்தி பூங்காவில்‌ ஆய்வு மேற்கொண்டு,



பூங்கா வளாகத்திலுள்ள நீச்சல்‌ குளம்‌ மற்றும்‌ அருகிலுள்ள உடற்பயிற்சி கூடத்தை ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையாளா மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்௧ரா பூங்காவின்‌ உட்புற பகுதி மற்றும்‌ வெளிப்புற பகுதிகளைத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும்‌ என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்‌.

இந்த ஆய்வின்போது உதவி ஆணையாளர் சிவசுப்பிரமணியம்‌, நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளா்‌ மாதேஸ்வரன்‌, உதவி செயற்பொறியாளர்‌ ஹேமலதா, உதவி பொறியாளா்கள்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலார்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...