அமராவதி நகர் சைனிக் ராணுவப் பள்ளியில் முதல்முறையாக மாணவிகள் சேர்க்கை.!!!

சைனிக் ராணுவப் பள்ளியில் முதல்முறையாக மாணவிகள் சேர்க்கை, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள அமராவதி நகரில் நடைப்பெற்றது.


திருப்பூர்: சைனிக் ராணுவப் பள்ளியில் முதல்முறையாக மாணவிகள் சேர்க்கை திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள அமராவதி நகரில் நடைப்பெற்றது.

சைனிக் ராணுவப் பள்ளியில் முதல்முறையாக மாணவிகள் சேர்க்கை திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள அமராவதி நகரில் சைனிக் ராணுவப் பயிற்சி பள்ளி அமைந்துள்ளது.

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி 1962-ஆம் ஆண்டுதுவக்கப்பட்டது. இப்பள்ளியில் கடந்த பல ஆண்டுகளாக மாணவர்கள் மட்டுமே படித்து வந்தனர்.

இப்பள்ளியில் ராணுவ வீரக்களுக்கு வழங்கப்படும் அணிவகுப்பு பயிற்சி மற்றும் பல்வேறு உடற்பயிற்சிகள் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்படுகிறது. இதனால் மாணவர்கள் விடுதியில் தங்கிப் படிப்பதற்கு மட்டுமே இப்பள்ளி அனுமதி அளித்துள்ளது.

நாள்தோறும் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு இங்கு அனுமதி கிடையாது. இந்நிலையில் இப்பள்ளி வரலாற்றில் முதல்முறையாகக் கடந்த ஆண்டு மாணவிகளுக்கான சேர்க்கை துவங்கியது. கொராணா தாக்கம் காரணமாகப் பள்ளிகளுக்கு விடுமுறை விட்ட காரணத்தால் மாணவிகள் ஆன்லைன் மூலம் கல்வி கற்று வந்தனர்.

இந்நிலையில், பள்ளிகள் விரைவில் திறக்க உள்ளது.



எனவே முதல்முறையாக இப்பள்ளிக்குப் புதிதாகச் சேர்ந்துள்ள மாணவிகள் வருகை புரிந்தனர்.



இந்த மாணவிகளுக்கான தங்கும் விடுதி இன்று திறக்கப்பட்டது.



தமிழகத்தின் புகழ்பெற்ற வீரப்பெண் ராணி வேலுநாச்சியார் அவர்களின் பெயரைப் பெண்கள் விடுதியின் பெயராகச் சூட்டியுள்ளனர்.



இந்த விடுதியில் அமைக்கப்பட்டிருந்த வேலுநாச்சியார் அவர்களது திருவுருவ புகைப்படத்தைப் பள்ளி முதல்வர் கேப்டன் நிர்மல்ரகு அவர்களின் மனைவி டாக்டர் ஆஷா நிர்மல் ரகு அவர்கள் திறந்து வைத்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...