உரிய பயனாளிகளுக்குப் பட்டா வழங்காமல் முறைகேடாகப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறி காரமடை பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.
கோவை: உரிய பயனாளிகளுக்குப் பட்டா வழங்காமல் முறைகேடாகப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறி காரமடை பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை அம்பேத்கர் நகர், எத்தபன் நகர் இரண்டிற்கும் எட்டு மாதங்களுக்கு முன்பு ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் 91-பயனாளிகளுக்கு இலவச வீட்டுப் பட்டா வழங்கப்பட்டது.
பட்டா பெற்ற நாளிலிருந்து 6-மாதங்களுக்குள் வீடுகள் அமைத்திட நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மேற்படி எந்தவித அடிப்படைகளும் இல்லாமல் மக்கள் அங்கு வாழ்ந்து வருவதாகவும். தனிநபர் ஒருவர் பட்டாக்களில் முறைகேடு செய்வதாகக் குற்றம்சாட்டிய அவர்கள், 2002 ஆம் ஆண்டு வீட்டு மனை பட்டாவினை ஆதிதிராவிடர் நலத்துறை வழங்கியுள்ளது.
மேலும் வீடுமனைப் பெற்றவர்கள் அங்கு 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் அங்கு குடியேறாததால் வீட்டு மனை பாட்ட ரத்து செய்யப்பட்டதாகவும், அவிடங்களின் பட்டாக்களை மனுகாரர்களுக்கு கூடுத்ததாகவும் அந்த இடத்தை மீண்டும் முந்தைய பயனாளிகளுக்கே கொடுப்பதாகக் கூறி பன்னீர்செல்வம் என்ற தனிநபர் பணம் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
அந்த இடத்திலிருந்து, மக்களை துரத்தும் எண்ணத்தோடு அவர்களை மிரட்டியதாகக் கூறுகின்றனர். இது குறித்து போலிஸாரிடம் புகார் அப்பகுதி மக்கள் புகார் அழித்துள்ளனர். இதனை விசாரித்த காவல்துறை, பன்னீர்செல்வம், சோமசுந்தரம், துரை மற்றும் ரமேஷ் ஆகியோரை அப்பகுதிக்கு வரக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறு பிரச்சனைகள் நடந்துகொண்டு இருக்கும் வேளையில், மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களைத் தொடர்ந்து பொதுமக்கள் மனுக்களை அழித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

தீர்வு இல்லாத காரணத்தால் தங்கள் வழ்வாதரமே பாதிக்கப்படுகின்றது என்று கூறிய அவர்கள், தீடிர் என்று தர்ணாவில் ஈடுப்பட்டனர்.

மேலும், சாலைகளை மறித்து அவர்கள் அமர்ந்ததால் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சிக்கும், கோவை மாவட்ட ஆட்சியரின் சிறந்த பணிக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் வண்ணம் உள்ளது. திமுக பிரமுகர் என்று தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் பன்னீர்செல்வத்தின் செயல்கள் என்று கூறினார்கள்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை அம்பேத்கர் நகர், எத்தபன் நகர் இரண்டிற்கும் எட்டு மாதங்களுக்கு முன்பு ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் 91-பயனாளிகளுக்கு இலவச வீட்டுப் பட்டா வழங்கப்பட்டது.
பட்டா பெற்ற நாளிலிருந்து 6-மாதங்களுக்குள் வீடுகள் அமைத்திட நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மேற்படி எந்தவித அடிப்படைகளும் இல்லாமல் மக்கள் அங்கு வாழ்ந்து வருவதாகவும். தனிநபர் ஒருவர் பட்டாக்களில் முறைகேடு செய்வதாகக் குற்றம்சாட்டிய அவர்கள், 2002 ஆம் ஆண்டு வீட்டு மனை பட்டாவினை ஆதிதிராவிடர் நலத்துறை வழங்கியுள்ளது.
மேலும் வீடுமனைப் பெற்றவர்கள் அங்கு 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் அங்கு குடியேறாததால் வீட்டு மனை பாட்ட ரத்து செய்யப்பட்டதாகவும், அவிடங்களின் பட்டாக்களை மனுகாரர்களுக்கு கூடுத்ததாகவும் அந்த இடத்தை மீண்டும் முந்தைய பயனாளிகளுக்கே கொடுப்பதாகக் கூறி பன்னீர்செல்வம் என்ற தனிநபர் பணம் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
அந்த இடத்திலிருந்து, மக்களை துரத்தும் எண்ணத்தோடு அவர்களை மிரட்டியதாகக் கூறுகின்றனர். இது குறித்து போலிஸாரிடம் புகார் அப்பகுதி மக்கள் புகார் அழித்துள்ளனர். இதனை விசாரித்த காவல்துறை, பன்னீர்செல்வம், சோமசுந்தரம், துரை மற்றும் ரமேஷ் ஆகியோரை அப்பகுதிக்கு வரக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறு பிரச்சனைகள் நடந்துகொண்டு இருக்கும் வேளையில், மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களைத் தொடர்ந்து பொதுமக்கள் மனுக்களை அழித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
தீர்வு இல்லாத காரணத்தால் தங்கள் வழ்வாதரமே பாதிக்கப்படுகின்றது என்று கூறிய அவர்கள், தீடிர் என்று தர்ணாவில் ஈடுப்பட்டனர்.
மேலும், சாலைகளை மறித்து அவர்கள் அமர்ந்ததால் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சிக்கும், கோவை மாவட்ட ஆட்சியரின் சிறந்த பணிக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் வண்ணம் உள்ளது. திமுக பிரமுகர் என்று தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் பன்னீர்செல்வத்தின் செயல்கள் என்று கூறினார்கள்.