கோவையில் 2 பெண் பேராசிரியர்கள் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவையில் 2 பெண் பேராசிரியர்கள் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவர் 25 வயது இளம்பெண், நாமக்கல்லில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார்.
அதே கல்லூரியில் திருப்பூர் பெருமாநல்லூர் ஊரைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இருவரும் ஒரே விடுதி அறையில் தங்கியிருந்தனர். ஒரு ஆண்டுகளாக இவர்கள் ஒரே கல்லூரி மற்றும் விடுதிகளில் தங்கி இருந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், 25 வயது இளம்பெண் கல்லூரியிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார். இதை அறிந்த அவரது தோழி தனது பணியை ராஜினாமா செய்துவிட்டார்.
இந்த நிலையில், கோவை காந்திபுரம் வந்த இவர்கள் 2 பேரும் தன்னுடைய பெற்றோர்களுக்கு மெசேஜ் அனுப்பினர். எங்களை யாரும் தேட வேண்டாம், நான் எனது தோழியுடன் செல்கிறேன். இனி வரமாட்டேன் என தகவல் தெரிவித்து இருந்தனர்.
இதுதொடர்பாக இளம்பெண்களின் பெற்றோர்கள் காட்டூர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தேடி வருகின்றனர்.
கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவர் 25 வயது இளம்பெண், நாமக்கல்லில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார்.
அதே கல்லூரியில் திருப்பூர் பெருமாநல்லூர் ஊரைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இருவரும் ஒரே விடுதி அறையில் தங்கியிருந்தனர். ஒரு ஆண்டுகளாக இவர்கள் ஒரே கல்லூரி மற்றும் விடுதிகளில் தங்கி இருந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், 25 வயது இளம்பெண் கல்லூரியிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார். இதை அறிந்த அவரது தோழி தனது பணியை ராஜினாமா செய்துவிட்டார்.
இந்த நிலையில், கோவை காந்திபுரம் வந்த இவர்கள் 2 பேரும் தன்னுடைய பெற்றோர்களுக்கு மெசேஜ் அனுப்பினர். எங்களை யாரும் தேட வேண்டாம், நான் எனது தோழியுடன் செல்கிறேன். இனி வரமாட்டேன் என தகவல் தெரிவித்து இருந்தனர்.
இதுதொடர்பாக இளம்பெண்களின் பெற்றோர்கள் காட்டூர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தேடி வருகின்றனர்.