எங்களை யாரும் தேட வேண்டாம்..!! கோவையில் பெற்றோருக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு 2 பெண் பேராசிரியர்கள் மாயம்..!

கோவையில் 2 பெண் பேராசிரியர்கள் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவையில் 2 பெண் பேராசிரியர்கள் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவர் 25 வயது இளம்பெண், நாமக்கல்லில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார்.

அதே கல்லூரியில் திருப்பூர் பெருமாநல்லூர் ஊரைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இருவரும் ஒரே விடுதி அறையில் தங்கியிருந்தனர். ஒரு ஆண்டுகளாக இவர்கள் ஒரே கல்லூரி மற்றும் விடுதிகளில் தங்கி இருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், 25 வயது இளம்பெண் கல்லூரியிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார். இதை அறிந்த அவரது தோழி தனது பணியை ராஜினாமா செய்துவிட்டார்.

இந்த நிலையில், கோவை காந்திபுரம் வந்த இவர்கள் 2 பேரும் தன்னுடைய பெற்றோர்களுக்கு மெசேஜ் அனுப்பினர். எங்களை யாரும் தேட வேண்டாம், நான் எனது தோழியுடன் செல்கிறேன். இனி வரமாட்டேன் என தகவல் தெரிவித்து இருந்தனர்.

இதுதொடர்பாக இளம்பெண்களின் பெற்றோர்கள் காட்டூர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தேடி வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...