கோவை பெ.நா.பாளையம் வனப்பகுதியில் உடும்பு வேட்டையில் ஈடுபட்ட இருவர் கைது; இறந்த நிலையில் மூன்று உடும்புகள் பறிமுதல்

வனவர் K.முத்து தலைமையில், வனக்காப்பாளர்கள், எஸ்.சதீஷ்குமார் மற்றும் சி.தினேஷ் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் அடங்கிய தனிக் குழுவினர், ரோந்துப் பணியின்போது, உடும்பு வேட்டையாடியதை கண்டுபிடித்தனர்.


கோவை: பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம், தோலம்பாளையம் கிழக்கு பீட் வனப்பகுதியில், உடும்பு வேட்டையாடிய இரண்டு நபர்கள் செய்யப்பட்டுள்ளனர். இருவரும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோவை வனக் கோட்டம், பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம், தோலம்பாளையம் கிழக்கு பீட், தடாகம் காப்புக் காடு, கன்னிமார் கோவில் சராகப் பகுதியில், பிரிவு வனவர் K.முத்து தலைமையில், வனக்காப்பாளர்கள், எஸ்.சதீஷ்குமார் மற்றும் சி.தினேஷ் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் அடங்கிய தனிக் குழுவினர், கடந்த 5 ஆம் தேதி மாலை 5.00 மணியளவில், வழக்கமான ரோந்துப் பணியின்போது, இரண்டு நபர்கள், உடும்பு (Monitor Lizard) வேட்டையாடியது கண்டுபிடிக்கப்பட்டது.

வேட்டையாடிய இருவரும் தப்பியோடி தலைமறைவாகி விட்ட நிலையில், வேட்டையாடிய மூன்று உடும்புகள் மற்றும் வலைகள் கைப்பற்றப்பட்டன. தப்பியோடிய எதிரிகளைக் கண்டுபிடிக்க, தனிக் குழுக்கள் அமைத்து, தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதில், 06.10.2021ஆம் தேதி பிற்பகல், தப்பி ஓடிய நபர்கள் பிடிபட்டனர்.



விசாரணையில் இருவரும், பிளிச்சி கவுண்டனூர், காளம்பாளையம் - கிராமம், மேட்டுப்பாளையம் வட்டத்தை சேர்ந்த கே. இராஜேந்திரன் (41) மற்றும் கே.மணி (42) என்பது தெரியவந்தது. இருவரிடமும், பெ.நா.பாளையம் வனச்சரக அலுவலர், S.செல்வராஜ், விசாரணை மேற்கொண்டார்.



மேலும், வனப்பகுதியில் வேட்டையாடிய இடம் மற்றும் வெட்டுக் கத்தியை மறைத்து வைத்த இடம் ஆகியவற்றை அவர்கள் அடையாளம் காட்டி, வேட்டையாடிய குற்றத்தை ஒப்புக் கொண்டனர். பின்னர், இருவரும் கைது செய்யப்பட்டு, கோவை மாவட்ட வன அலுவலர் T.K.அசோக்குமார் IFS அவர்களது வழிகாட்டுதலின்படி, இன்று (07.10.2021) மேட்டுப்பாளையம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற நடுவர் உத்தரவின்படி, அவிநாசி கிளை சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

மேலும், வேட்டையாடப்பட்ட மூன்று உடும்புகள், நீதிமன்ற உத்தரவின்படி, கோவனூர் கால்நடை உதவி மருத்துவரால், உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, மண்ணில் புதைக்க முடிவு செய்யப்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...