வனவர் K.முத்து தலைமையில், வனக்காப்பாளர்கள், எஸ்.சதீஷ்குமார் மற்றும் சி.தினேஷ் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் அடங்கிய தனிக் குழுவினர், ரோந்துப் பணியின்போது, உடும்பு வேட்டையாடியதை கண்டுபிடித்தனர்.
கோவை: பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம், தோலம்பாளையம் கிழக்கு பீட் வனப்பகுதியில், உடும்பு வேட்டையாடிய இரண்டு நபர்கள் செய்யப்பட்டுள்ளனர். இருவரும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவை வனக் கோட்டம், பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம், தோலம்பாளையம் கிழக்கு பீட், தடாகம் காப்புக் காடு, கன்னிமார் கோவில் சராகப் பகுதியில், பிரிவு வனவர் K.முத்து தலைமையில், வனக்காப்பாளர்கள், எஸ்.சதீஷ்குமார் மற்றும் சி.தினேஷ் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் அடங்கிய தனிக் குழுவினர், கடந்த 5 ஆம் தேதி மாலை 5.00 மணியளவில், வழக்கமான ரோந்துப் பணியின்போது, இரண்டு நபர்கள், உடும்பு (Monitor Lizard) வேட்டையாடியது கண்டுபிடிக்கப்பட்டது.
வேட்டையாடிய இருவரும் தப்பியோடி தலைமறைவாகி விட்ட நிலையில், வேட்டையாடிய மூன்று உடும்புகள் மற்றும் வலைகள் கைப்பற்றப்பட்டன. தப்பியோடிய எதிரிகளைக் கண்டுபிடிக்க, தனிக் குழுக்கள் அமைத்து, தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதில், 06.10.2021ஆம் தேதி பிற்பகல், தப்பி ஓடிய நபர்கள் பிடிபட்டனர்.

விசாரணையில் இருவரும், பிளிச்சி கவுண்டனூர், காளம்பாளையம் - கிராமம், மேட்டுப்பாளையம் வட்டத்தை சேர்ந்த கே. இராஜேந்திரன் (41) மற்றும் கே.மணி (42) என்பது தெரியவந்தது. இருவரிடமும், பெ.நா.பாளையம் வனச்சரக அலுவலர், S.செல்வராஜ், விசாரணை மேற்கொண்டார்.

மேலும், வனப்பகுதியில் வேட்டையாடிய இடம் மற்றும் வெட்டுக் கத்தியை மறைத்து வைத்த இடம் ஆகியவற்றை அவர்கள் அடையாளம் காட்டி, வேட்டையாடிய குற்றத்தை ஒப்புக் கொண்டனர். பின்னர், இருவரும் கைது செய்யப்பட்டு, கோவை மாவட்ட வன அலுவலர் T.K.அசோக்குமார் IFS அவர்களது வழிகாட்டுதலின்படி, இன்று (07.10.2021) மேட்டுப்பாளையம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற நடுவர் உத்தரவின்படி, அவிநாசி கிளை சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
மேலும், வேட்டையாடப்பட்ட மூன்று உடும்புகள், நீதிமன்ற உத்தரவின்படி, கோவனூர் கால்நடை உதவி மருத்துவரால், உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, மண்ணில் புதைக்க முடிவு செய்யப்பட்டது.
கோவை வனக் கோட்டம், பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம், தோலம்பாளையம் கிழக்கு பீட், தடாகம் காப்புக் காடு, கன்னிமார் கோவில் சராகப் பகுதியில், பிரிவு வனவர் K.முத்து தலைமையில், வனக்காப்பாளர்கள், எஸ்.சதீஷ்குமார் மற்றும் சி.தினேஷ் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் அடங்கிய தனிக் குழுவினர், கடந்த 5 ஆம் தேதி மாலை 5.00 மணியளவில், வழக்கமான ரோந்துப் பணியின்போது, இரண்டு நபர்கள், உடும்பு (Monitor Lizard) வேட்டையாடியது கண்டுபிடிக்கப்பட்டது.
வேட்டையாடிய இருவரும் தப்பியோடி தலைமறைவாகி விட்ட நிலையில், வேட்டையாடிய மூன்று உடும்புகள் மற்றும் வலைகள் கைப்பற்றப்பட்டன. தப்பியோடிய எதிரிகளைக் கண்டுபிடிக்க, தனிக் குழுக்கள் அமைத்து, தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதில், 06.10.2021ஆம் தேதி பிற்பகல், தப்பி ஓடிய நபர்கள் பிடிபட்டனர்.
விசாரணையில் இருவரும், பிளிச்சி கவுண்டனூர், காளம்பாளையம் - கிராமம், மேட்டுப்பாளையம் வட்டத்தை சேர்ந்த கே. இராஜேந்திரன் (41) மற்றும் கே.மணி (42) என்பது தெரியவந்தது. இருவரிடமும், பெ.நா.பாளையம் வனச்சரக அலுவலர், S.செல்வராஜ், விசாரணை மேற்கொண்டார்.
மேலும், வனப்பகுதியில் வேட்டையாடிய இடம் மற்றும் வெட்டுக் கத்தியை மறைத்து வைத்த இடம் ஆகியவற்றை அவர்கள் அடையாளம் காட்டி, வேட்டையாடிய குற்றத்தை ஒப்புக் கொண்டனர். பின்னர், இருவரும் கைது செய்யப்பட்டு, கோவை மாவட்ட வன அலுவலர் T.K.அசோக்குமார் IFS அவர்களது வழிகாட்டுதலின்படி, இன்று (07.10.2021) மேட்டுப்பாளையம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற நடுவர் உத்தரவின்படி, அவிநாசி கிளை சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
மேலும், வேட்டையாடப்பட்ட மூன்று உடும்புகள், நீதிமன்ற உத்தரவின்படி, கோவனூர் கால்நடை உதவி மருத்துவரால், உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, மண்ணில் புதைக்க முடிவு செய்யப்பட்டது.