பொள்ளாச்சிதேவம்பாடி வலசு, தங்கவேல் என்பவரின் தோட்டத்தில் உள்ள கிணற்றில், பெண் மயில் ஒன்று தவறி விழுந்தது.
கோவை: பொள்ளாச்சியில் பலத்த காற்றுக்கு கிணற்றுக்குள் விழுந்த மயிலை தீயணைப்புத்துறையினர் உயிருடன் மீட்டனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில், நேற்று முன்தினம் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது, தேவம்பாடி வலசு, தங்கவேல் என்பவரின் தோட்டத்தில் உள்ள கிணற்றில், பெண் மயில் ஒன்று தவறி விழுந்தது.
இதையடுத்து, பொள்ளாச்சி தீயணைப்பு துறையினருக்கு மக்கள் தகவல் அளித்தனர். தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று, கிணற்றுக்குள் இறங்கி, மயிலை பத்திரமாக உயிருடன் மீட்டு, வனப்பகுதியில் விட்டனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில், நேற்று முன்தினம் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது, தேவம்பாடி வலசு, தங்கவேல் என்பவரின் தோட்டத்தில் உள்ள கிணற்றில், பெண் மயில் ஒன்று தவறி விழுந்தது.
இதையடுத்து, பொள்ளாச்சி தீயணைப்பு துறையினருக்கு மக்கள் தகவல் அளித்தனர். தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று, கிணற்றுக்குள் இறங்கி, மயிலை பத்திரமாக உயிருடன் மீட்டு, வனப்பகுதியில் விட்டனர்.