சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் திமுக கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருவதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் திமுகவிற்கு பொதுமக்கள் ஆதரவு அதிகரித்துள்ளதாக தெரிவித்தனர்.
கோவை: பொள்ளாச்சி அடுத்த திவான்சாபுதூரில் ஊராட்சி மன்ற தலைவர் இடை தேர்தலுக்காக ஆலங்கடவு பகுதியில் திமுகவினர் இறுதிக்கட்ட தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட திவான்சாபுதூரில், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான இடைத்தேர்தல் வரும் 9ம் தேதி நடக்க உள்ளது. இதில் திமுக சார்பில் கலைவாணி சிலம்பரசன் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், இவருக்கு ஆதரவு தெரிவித்து, திமுக மாநில நெசவாளர் அணி செயலாளர் நாகராஜன் தலைமையில், மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர் மு.க.முத்து உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆலங்கடவு பகுதியில் வீதி வீதியாக சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் திமுக கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருவதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் திமுகவிற்கு பொதுமக்கள் ஆதரவு அதிகரித்துள்ளதாகவும், பத்தாண்டுகளாக கிராமப்புறங்களில் மக்களுக்கு நிறைவேற்றப்படாத அடிப்படை வசதிகளை செய்து கொடுப்போம் என்று வாக்குறுதி அளித்து இடைத்தேர்தலில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருவதாகவும், அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்றும் திமுகவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட திவான்சாபுதூரில், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான இடைத்தேர்தல் வரும் 9ம் தேதி நடக்க உள்ளது. இதில் திமுக சார்பில் கலைவாணி சிலம்பரசன் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், இவருக்கு ஆதரவு தெரிவித்து, திமுக மாநில நெசவாளர் அணி செயலாளர் நாகராஜன் தலைமையில், மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர் மு.க.முத்து உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆலங்கடவு பகுதியில் வீதி வீதியாக சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் திமுக கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருவதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் திமுகவிற்கு பொதுமக்கள் ஆதரவு அதிகரித்துள்ளதாகவும், பத்தாண்டுகளாக கிராமப்புறங்களில் மக்களுக்கு நிறைவேற்றப்படாத அடிப்படை வசதிகளை செய்து கொடுப்போம் என்று வாக்குறுதி அளித்து இடைத்தேர்தலில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருவதாகவும், அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்றும் திமுகவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.