மதுக்கரை அருகே திருமணம் செய்ய மறுத்த பெண்ணின் போட்டோக்களை சித்தரித்து வெளியிட்ட காதலன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: மதுக்கரை அருகே திருமணம் செய்ய மறுத்த பெண்ணின் போட்டோக்களை சித்தரித்து வெளியிட்ட காதலன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மதுக்கரை அடுத்த பாலத்துறை பிரிவு பகுதியில் வசித்து வருபவர் ஜமால் முகமது. இவரது 21 வயதான மகளான சுல்தானா பர்வீன் என்வருக்கும், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த யூசுப் அலி என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
ஆனால், இரு குடும்பத்தாருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகத் திருமணம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, யூசுப் அலி, நிச்சயிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்ளும்படி தொடர்ந்து தொல்லை செய்து வந்ததால், சுல்தானா பர்வீன்
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை காவல் நிலையத்தில், புகார் அளித்தார். அப்புகாரின் பேரில் விசாரணையும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சுல்தானா பர்வீன் வீட்டிற்கு அருகில் வசித்து வரும் யூசுப் அலியின் நண்பர், ஷ்யாம் என்பவர்யூசுப் அலியிடம், சுல்தானாவிற்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறியுள்ளார். இதையடுத்து, யூசுப் அலி அவரிடம் இருந்த சல்த்தானாவின் புகைப்படங்களை மார்பிங் செய்து, பெண் பார்த்து விட்டு சென்ற மணமகன் வீட்டிற்கு அனுப்பி இருக்கிறார்.
இதுபற்றி அவர்கள், பெண்ணின் குடும்பத்திடம் கேள்வி எழுப்பியுள்ளனர் .இதையடுத்து, சுல்தானா பர்வீன், தற்போது மதுக்கரை காவல் நிலையத்தில்புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், போலீசார் யூசுப் அலி மற்றும் ஷியாம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மதுக்கரை அடுத்த பாலத்துறை பிரிவு பகுதியில் வசித்து வருபவர் ஜமால் முகமது. இவரது 21 வயதான மகளான சுல்தானா பர்வீன் என்வருக்கும், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த யூசுப் அலி என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
ஆனால், இரு குடும்பத்தாருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகத் திருமணம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, யூசுப் அலி, நிச்சயிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்ளும்படி தொடர்ந்து தொல்லை செய்து வந்ததால், சுல்தானா பர்வீன்
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை காவல் நிலையத்தில், புகார் அளித்தார். அப்புகாரின் பேரில் விசாரணையும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சுல்தானா பர்வீன் வீட்டிற்கு அருகில் வசித்து வரும் யூசுப் அலியின் நண்பர், ஷ்யாம் என்பவர்யூசுப் அலியிடம், சுல்தானாவிற்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறியுள்ளார். இதையடுத்து, யூசுப் அலி அவரிடம் இருந்த சல்த்தானாவின் புகைப்படங்களை மார்பிங் செய்து, பெண் பார்த்து விட்டு சென்ற மணமகன் வீட்டிற்கு அனுப்பி இருக்கிறார்.
இதுபற்றி அவர்கள், பெண்ணின் குடும்பத்திடம் கேள்வி எழுப்பியுள்ளனர் .இதையடுத்து, சுல்தானா பர்வீன், தற்போது மதுக்கரை காவல் நிலையத்தில்புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், போலீசார் யூசுப் அலி மற்றும் ஷியாம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.