விபச்சாரம் நடத்திய புரோக்கர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், மூன்று பெண்களையும் மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
கோவை: கோவையில் கால் டாக்சி டிரைவரை விபசாரத்திற்கு அழைத்த புரோக்கர்கள் இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவை பாப்பநாயக்கன் பாளையம் பகுதியைச் சேர்ந்த பாண்டி என்பவரின் மகன் ஜெயபிரகாஷ் (36). கால் டாக்சி டிரைவரான இவர் நேற்று மதியம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த முதியவர் ஒருவர் தங்களிடம் அழகிய இளம்பெண்கள் இருப்பதாகவும் பணம் கொடுத்தால் அவர்களுடன் ஜாலியாக இருக்கலாம் என்றும் கூறியிருக்கிறார். இதையடுத்து ஜெயப்பிரகாஷ் பணம் எடுத்து விட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு கோவை ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பெயரில் சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் ஜெயபிரகாஷ் கூறிய இடத்திற்கு சென்றனர். அப்போது, அங்கு அவர்கள் நின்று கொண்டிருந்தனர். தொடர்ந்து அவர்களை பிடித்து நடத்திய விசாரணையில் அதே பகுதியில் நின்று கொண்டிருந்த மூன்று இளம் பெண்களையும் அவர்கள் விபச்சாரத்திற்காக ஈடுபடுத்தி வருவது தெரிய வந்தது.
தொடர்ந்து அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து நடத்திய விசாரணையில் தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் பழனியப்பன் (55 ) மற்றும் திருவாரூர் மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்த ராமன் என்பவரின் மகன் துரை (39) ஆகிய இருவரும் புரோக்கர்களாக செயல்பட்டு இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தியது தெரிய வந்தது.
மேலும், விபச்சாரத்திற்காக அழைத்துவரப்பட்டு இருந்த மதுரை மேலூரை சேர்ந்த 27 வயது பெண், மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 24 வயது பெண் மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த 25 வயது பெண் ஆகிய மூன்று பெண்களையும் மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபச்சாரம் நடத்திய புரோக்கர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை பாப்பநாயக்கன் பாளையம் பகுதியைச் சேர்ந்த பாண்டி என்பவரின் மகன் ஜெயபிரகாஷ் (36). கால் டாக்சி டிரைவரான இவர் நேற்று மதியம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த முதியவர் ஒருவர் தங்களிடம் அழகிய இளம்பெண்கள் இருப்பதாகவும் பணம் கொடுத்தால் அவர்களுடன் ஜாலியாக இருக்கலாம் என்றும் கூறியிருக்கிறார். இதையடுத்து ஜெயப்பிரகாஷ் பணம் எடுத்து விட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு கோவை ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பெயரில் சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் ஜெயபிரகாஷ் கூறிய இடத்திற்கு சென்றனர். அப்போது, அங்கு அவர்கள் நின்று கொண்டிருந்தனர். தொடர்ந்து அவர்களை பிடித்து நடத்திய விசாரணையில் அதே பகுதியில் நின்று கொண்டிருந்த மூன்று இளம் பெண்களையும் அவர்கள் விபச்சாரத்திற்காக ஈடுபடுத்தி வருவது தெரிய வந்தது.
தொடர்ந்து அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து நடத்திய விசாரணையில் தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் பழனியப்பன் (55 ) மற்றும் திருவாரூர் மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்த ராமன் என்பவரின் மகன் துரை (39) ஆகிய இருவரும் புரோக்கர்களாக செயல்பட்டு இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தியது தெரிய வந்தது.
மேலும், விபச்சாரத்திற்காக அழைத்துவரப்பட்டு இருந்த மதுரை மேலூரை சேர்ந்த 27 வயது பெண், மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 24 வயது பெண் மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த 25 வயது பெண் ஆகிய மூன்று பெண்களையும் மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபச்சாரம் நடத்திய புரோக்கர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.