கோவையில் கால் டாக்சி டிரைவரை விபசாரத்திற்கு அழைத்த புரோக்கர்கள் இருவர் கைது..!

விபச்சாரம் நடத்திய புரோக்கர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், மூன்று பெண்களையும் மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.


கோவை: கோவையில் கால் டாக்சி டிரைவரை விபசாரத்திற்கு அழைத்த புரோக்கர்கள் இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோவை பாப்பநாயக்கன் பாளையம் பகுதியைச் சேர்ந்த பாண்டி என்பவரின் மகன் ஜெயபிரகாஷ் (36). கால் டாக்சி டிரைவரான இவர் நேற்று மதியம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த முதியவர் ஒருவர் தங்களிடம் அழகிய இளம்பெண்கள் இருப்பதாகவும் பணம் கொடுத்தால் அவர்களுடன் ஜாலியாக இருக்கலாம் என்றும் கூறியிருக்கிறார். இதையடுத்து ஜெயப்பிரகாஷ் பணம் எடுத்து விட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு கோவை ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பெயரில் சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் ஜெயபிரகாஷ் கூறிய இடத்திற்கு சென்றனர். அப்போது, அங்கு அவர்கள் நின்று கொண்டிருந்தனர். தொடர்ந்து அவர்களை பிடித்து நடத்திய விசாரணையில் அதே பகுதியில் நின்று கொண்டிருந்த மூன்று இளம் பெண்களையும் அவர்கள் விபச்சாரத்திற்காக ஈடுபடுத்தி வருவது தெரிய வந்தது.

தொடர்ந்து அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து நடத்திய விசாரணையில் தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் பழனியப்பன் (55 ) மற்றும் திருவாரூர் மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்த ராமன் என்பவரின் மகன் துரை (39) ஆகிய இருவரும் புரோக்கர்களாக செயல்பட்டு இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தியது தெரிய வந்தது.

மேலும், விபச்சாரத்திற்காக அழைத்துவரப்பட்டு இருந்த மதுரை மேலூரை சேர்ந்த 27 வயது பெண், மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 24 வயது பெண் மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த 25 வயது பெண் ஆகிய மூன்று பெண்களையும் மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபச்சாரம் நடத்திய புரோக்கர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...