உக்கடத்தில் போக்குவரத்திற்கு இடையூறாகச் சுற்றித்திரிந்த மாடுகள், வ.உ.சி பூங்காவில் அடைப்பு.!!

மாடுகளில் வயதைப் பொறுத்து ரூபாய் 5000-வரை கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து சாலைகளில் கால்நடைகள் உலா வந்தால் அவற்றின் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.



கோவை: சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. இதன்படி சாலைகளில் சுற்றித் திரிந்த கன்றுக்குட்டிகள் உள்பட 7-மாடுகள் பிடித்து அடைக்கப்பட்டுள்ளன.

கோவை மாநகரில் போக்குவரத்திற்கு இடையூறாக ஆடுகள் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் அதிகமாக உலா வருகின்றன இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைகின்றனர்.

இதையடுத்து, சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளைப் பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் உத்தரவிட்டார்.



இதனைத் தொடர்ந்து வஉசி உயிரியல் பூங்கா இயக்குனர் டாக்டர் செந்தில்நாதன் தலைமையில் ஊழியர்கள் கோவை உக்கடம் புல்லுக்காடு குனியமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் சுற்றித் திரிந்த 2-கன்றுக் குட்டிகள் உள்பட 7-மாடுகளைப் பிடித்து கோவை வஉசி பூங்காவில் அடைத்தனர்.



இதுகுறித்து டாக்டர் செந்தில்நாதன் கூறும்போது, சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. இதன்படி சாலைகளில் சுற்றித் திரிந்த கன்றுக்குட்டிகள் உள்பட 7-மாடுகள் பிடித்து அடைக்கப்பட்டுள்ளன.

மாடுகளில் வயதைப் பொறுத்து ரூபாய் 5000-வரை கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து சாலைகளில் கால்நடைகள் உலா வந்தால் அவற்றின் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...