மாடுகளில் வயதைப் பொறுத்து ரூபாய் 5000-வரை கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து சாலைகளில் கால்நடைகள் உலா வந்தால் அவற்றின் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கோவை: சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. இதன்படி சாலைகளில் சுற்றித் திரிந்த கன்றுக்குட்டிகள் உள்பட 7-மாடுகள் பிடித்து அடைக்கப்பட்டுள்ளன.
கோவை மாநகரில் போக்குவரத்திற்கு இடையூறாக ஆடுகள் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் அதிகமாக உலா வருகின்றன இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைகின்றனர்.
இதையடுத்து, சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளைப் பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து வஉசி உயிரியல் பூங்கா இயக்குனர் டாக்டர் செந்தில்நாதன் தலைமையில் ஊழியர்கள் கோவை உக்கடம் புல்லுக்காடு குனியமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் சுற்றித் திரிந்த 2-கன்றுக் குட்டிகள் உள்பட 7-மாடுகளைப் பிடித்து கோவை வஉசி பூங்காவில் அடைத்தனர்.
இதுகுறித்து டாக்டர் செந்தில்நாதன் கூறும்போது, சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. இதன்படி சாலைகளில் சுற்றித் திரிந்த கன்றுக்குட்டிகள் உள்பட 7-மாடுகள் பிடித்து அடைக்கப்பட்டுள்ளன.
மாடுகளில் வயதைப் பொறுத்து ரூபாய் 5000-வரை கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து சாலைகளில் கால்நடைகள் உலா வந்தால் அவற்றின் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.