உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற விவசாயிகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவத்தைக் கண்டித்து திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற விவசாயிகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவத்தைக் கண்டித்து திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் பகுதியில் வேளாண் சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சூழ்நிலையில் மத்திய இணையமைச்சரின் மகன் கார் ஏற்றி விவசாயிகளைப் படுகொலை செய்ததற்குக் கண்டனம் தெரிவித்தனர்.

அங்கு ஏற்பட்ட வன்முறையில் துப்பாக்கிச் சூடு நடத்தியும், விவசாயிகள் கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதற்குக் காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் உத்தரப் பிரதேச மாநில அரசு மற்றும் மத்திய பாஜக அரசுக்கு எதிராகக் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் பகுதியில் வேளாண் சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சூழ்நிலையில் மத்திய இணையமைச்சரின் மகன் கார் ஏற்றி விவசாயிகளைப் படுகொலை செய்ததற்குக் கண்டனம் தெரிவித்தனர்.
அங்கு ஏற்பட்ட வன்முறையில் துப்பாக்கிச் சூடு நடத்தியும், விவசாயிகள் கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதற்குக் காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் உத்தரப் பிரதேச மாநில அரசு மற்றும் மத்திய பாஜக அரசுக்கு எதிராகக் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.