தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மணிகண்டனின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே நெ.10 முத்தூர் பகுதியில் கள்ளக்காதலனுடன் மனைவி சென்றதால், விரக்தி அடைந்த கணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள நெ.10 முத்தூர் இந்திரா காலனி பகுதியில் வசித்து வந்தவர் மணிகண்டன் (37). லாரி ஓட்டுநரான இவருக்கு பத்மாவதி என்ற மனைவியும், ஜனனி, அர்ச்சனா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர்.
இந்நிலையில், மணிகண்டனின் மனைவி பத்மாவதியும் அதே பகுதியில் வசித்து வந்த பார்த்திபன் என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்ததாக கூறப்படுகிறது.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பத்மாவதி கள்ளக் காதலனான பார்த்திபனுடன் சென்றுவிட்டார். மனைவி கள்ளக்காதலுடன் சென்றதால் மன விரக்தியில் இருந்த கணவன் மணிகண்டன், நேற்று இரவு அவரது மகள்களை பொள்ளாச்சி வஞ்சியபுரம் பகுதியில் உள்ள தாத்தா வீட்டில் விட்டுவிட்டு மீண்டும் நெ.10 முத்தூர் பகுதியிலுள்ள வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று காலை வெகுநேரமாகியும் மணிகண்டன் வீட்டைவிட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த மணிகண்டனின் அண்ணன் ரங்கசாமி உள்ளே சென்று பார்த்தபோது வீட்டினுள் மணிகண்டன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது
இதையடுத்து, கிணத்துக்கடவு காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர் மணிகண்டனின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த தற்கொலை குறித்து கிணத்துக்கடவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள நெ.10 முத்தூர் இந்திரா காலனி பகுதியில் வசித்து வந்தவர் மணிகண்டன் (37). லாரி ஓட்டுநரான இவருக்கு பத்மாவதி என்ற மனைவியும், ஜனனி, அர்ச்சனா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர்.
இந்நிலையில், மணிகண்டனின் மனைவி பத்மாவதியும் அதே பகுதியில் வசித்து வந்த பார்த்திபன் என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்ததாக கூறப்படுகிறது.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பத்மாவதி கள்ளக் காதலனான பார்த்திபனுடன் சென்றுவிட்டார். மனைவி கள்ளக்காதலுடன் சென்றதால் மன விரக்தியில் இருந்த கணவன் மணிகண்டன், நேற்று இரவு அவரது மகள்களை பொள்ளாச்சி வஞ்சியபுரம் பகுதியில் உள்ள தாத்தா வீட்டில் விட்டுவிட்டு மீண்டும் நெ.10 முத்தூர் பகுதியிலுள்ள வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று காலை வெகுநேரமாகியும் மணிகண்டன் வீட்டைவிட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த மணிகண்டனின் அண்ணன் ரங்கசாமி உள்ளே சென்று பார்த்தபோது வீட்டினுள் மணிகண்டன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது
இதையடுத்து, கிணத்துக்கடவு காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர் மணிகண்டனின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த தற்கொலை குறித்து கிணத்துக்கடவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.