புகாரின் பேரில் கோவை சின்னவேடம்பட்டி சேர்ந்த 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சரவணம்பட்டி போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை: கோவையில் கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் இருவருக்கு கத்திக்குத்து விழுந்தது.
கோவை சின்னவேடம்பட்டி, ராமர் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் (26). தனியார் நிறுவன ஊழியரான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் கடந்த ஒரு மாதத்துக்கு முன் கிரிக்கெட் விளையாட்டில் தகராறு ஏற்பட்டது.
இதுதொடர்பாக முன்விரோதம் இருந்து வந்த நிலையில், இரு நாட்களுக்கு முன், சின்னவேடம்பட்டியிலுள்ள ஒரு பேக்கரியில் நண்பர் அசோக்குடன் அரவிந்த் பேசி கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் அரவிந்த் மற்றும் அவரது நண்பரிடம் தகராறில் ஈடுபட்டனர். வாக்குவாதம் கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இந்த தாக்குதலில் அரவிந்த் மற்றும் மற்றொரு தரப்பைச் சேர்ந்த சூர்யபிரகாஷ் (25) ஆகிய இருவருக்கும் கத்திக்குத்து விழுந்தது. காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இருதரப்பிலும் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சரவணம்பட்டி போலீசார் சின்னவேடம்பட்டியை சேர்ந்த மாசி, சிவா, சூர்யபிரகாஷ், மணி, அரவிந்த் மற்றும் அசோக் ஆகிய ஆறு பேர் மீது தாக்குதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
கோவை சின்னவேடம்பட்டி, ராமர் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் (26). தனியார் நிறுவன ஊழியரான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் கடந்த ஒரு மாதத்துக்கு முன் கிரிக்கெட் விளையாட்டில் தகராறு ஏற்பட்டது.
இதுதொடர்பாக முன்விரோதம் இருந்து வந்த நிலையில், இரு நாட்களுக்கு முன், சின்னவேடம்பட்டியிலுள்ள ஒரு பேக்கரியில் நண்பர் அசோக்குடன் அரவிந்த் பேசி கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் அரவிந்த் மற்றும் அவரது நண்பரிடம் தகராறில் ஈடுபட்டனர். வாக்குவாதம் கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இந்த தாக்குதலில் அரவிந்த் மற்றும் மற்றொரு தரப்பைச் சேர்ந்த சூர்யபிரகாஷ் (25) ஆகிய இருவருக்கும் கத்திக்குத்து விழுந்தது. காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இருதரப்பிலும் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சரவணம்பட்டி போலீசார் சின்னவேடம்பட்டியை சேர்ந்த மாசி, சிவா, சூர்யபிரகாஷ், மணி, அரவிந்த் மற்றும் அசோக் ஆகிய ஆறு பேர் மீது தாக்குதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.