சுற்றுலா பயணிகளின் நலன் கருதி கவியருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் கவியருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகளுக்கு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
வால்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருவதால் சிற்றோடைகள் உருவாகி வெள்ளப்பெருக்கினால் ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆழியார் கவியருவியில் குளிப்பதற்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூரில் இருந்து அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து குளிப்பது வழக்கம்.

அந்த வகையில், இன்று சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று கனமழை பொழிந்தது. இதனால் வனத்துறையினர் சுற்றுலாப்பயணிகளை அருவி பகுதியில் இருந்து வெளியேற்றினர். வெளியேற்றிய சிறிது நேரத்தில் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், தொடர் கனமழையால் கவி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் நலன் கருதி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
வால்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருவதால் சிற்றோடைகள் உருவாகி வெள்ளப்பெருக்கினால் ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆழியார் கவியருவியில் குளிப்பதற்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூரில் இருந்து அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து குளிப்பது வழக்கம்.
அந்த வகையில், இன்று சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று கனமழை பொழிந்தது. இதனால் வனத்துறையினர் சுற்றுலாப்பயணிகளை அருவி பகுதியில் இருந்து வெளியேற்றினர். வெளியேற்றிய சிறிது நேரத்தில் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், தொடர் கனமழையால் கவி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் நலன் கருதி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.