அதேசமயம், வாய்தாவின் போது தவறாமல் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
கோவை: கோவையில் 20 லட்சம் ரூபாய் மோசடி வழக்கில் கைதான தலைமை ஆசிரியைக்கு விதிக்கப்பட்ட நிபந்தனை தளர்த்தப்பட்டது.
கோவை கணபதியைச் சேர்ந்தவர் மாலதி (52) பொன்னே கவுண்டன் புதூரிலுள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றினார்.
இந்நிலையில், மகள் திருமணத்திற்காக அதே பள்ளியில் பணிபுரிந்த உடற்கல்வி ஆசிரியர் கார்த்திக் குமாரிடம், 20 லட்சம் ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில், கடந்த ஜூலையில் கைது செய்யப்பட்டார். நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்ட அவர், எஸ்.பி., ஆபிசில் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தார்.
இந்த நிலையில், நிபந்தனை தளர்த்த, மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நிபந்தனையை தளர்த்தி உத்தரவிட்டது. மேலும், மாஜிஸ்திரேட் நீதிமன்றம், வாய்தாவின் போது தவறாமல் ஆஜராக உத்தரவிடப்பட்டது.
கோவை கணபதியைச் சேர்ந்தவர் மாலதி (52) பொன்னே கவுண்டன் புதூரிலுள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றினார்.
இந்நிலையில், மகள் திருமணத்திற்காக அதே பள்ளியில் பணிபுரிந்த உடற்கல்வி ஆசிரியர் கார்த்திக் குமாரிடம், 20 லட்சம் ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில், கடந்த ஜூலையில் கைது செய்யப்பட்டார். நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்ட அவர், எஸ்.பி., ஆபிசில் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தார்.
இந்த நிலையில், நிபந்தனை தளர்த்த, மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நிபந்தனையை தளர்த்தி உத்தரவிட்டது. மேலும், மாஜிஸ்திரேட் நீதிமன்றம், வாய்தாவின் போது தவறாமல் ஆஜராக உத்தரவிடப்பட்டது.