சாலையில் முறிந்து விழும் நிலையில் உள்ள மரங்களை நெடுஞ்சாலைத் துறை மற்றும் வருவாய்த் துறையினர் அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை: கோவை மேட்டுப்பாளையம் பத்தரகாளியம்மன் கோயில் செல்லும் வழியில் பழமை வாய்ந்த வாகை மரம் முறிந்து சாலையில் விழுந்தது.
மேட்டுப்பாளையத்தில் கடந்த ஒரு வார காலமாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், மேட்டுப்பாளையம் நெல்லிதுறை ரோடு பத்தரகாளியம்மன் கோயில் செல்லும் வழியில் உள்ள பழமைவாய்ந்த ராட்சச வாகை மரம் ஒன்று நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் முறிந்து சாலையில் விழுந்தது.
இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி கவுன்சிலர்கள் சாகுல் ஹமீது மற்றும் ராஜா முஹம்மது ஆகியோர் மேட்டுப்பாளையம் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் சாரதா டெர்ரி புராடக்டஸ் நிறுவனத்தின் ஜேசிபி எந்திரத்தின் உதவியுடன் 4 மணி நேரம் போராடி சாலையில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தினர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்:-
நெல்லிதுறை ரோடு பகுதியில் உள்ள இந்த மரம் எந்த நேரத்திலும் முறிந்து விழுந்துவிடும் என்றும் மழைக் காலமாக இருப்பதால் மரங்கள் முறிந்து சாலையில் எந்த நேரத்திலும் விழுந்து விடும் என்று நெடுஞ்சாலைத் துறையிடம் பல முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.
இரவு நேரத்தில் மரம் முறிந்து விழுந்ததால் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்படவில்லை. பகல் நேரத்தில் விழுந்திருந்தால் மிகப்பெரிய அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டிருக்கும் குறிப்பாக பத்தரகாளியம்மன் கோவிலுக்குச் செல்லும் பிரதான சாலையாக உள்ளதாலும், அருகிலே தொழிற்சாலை உள்ளதாலும், மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியாகும்.
எனவே, உடனடியாக நெடுஞ்சாலைத் துறை மற்றும் வருவாய்த் துறையினர் இது போன்ற மரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
2 மாதங்கள் முன்பு மழைக்காலங்களில் மரம் முறிந்து விழுந்ததில் காரமடை மற்றும் சிறுமுகை பகுதியில் இரண்டு பேர் இறந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேட்டுப்பாளையத்தில் கடந்த ஒரு வார காலமாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், மேட்டுப்பாளையம் நெல்லிதுறை ரோடு பத்தரகாளியம்மன் கோயில் செல்லும் வழியில் உள்ள பழமைவாய்ந்த ராட்சச வாகை மரம் ஒன்று நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் முறிந்து சாலையில் விழுந்தது.
இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி கவுன்சிலர்கள் சாகுல் ஹமீது மற்றும் ராஜா முஹம்மது ஆகியோர் மேட்டுப்பாளையம் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் சாரதா டெர்ரி புராடக்டஸ் நிறுவனத்தின் ஜேசிபி எந்திரத்தின் உதவியுடன் 4 மணி நேரம் போராடி சாலையில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தினர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்:-
நெல்லிதுறை ரோடு பகுதியில் உள்ள இந்த மரம் எந்த நேரத்திலும் முறிந்து விழுந்துவிடும் என்றும் மழைக் காலமாக இருப்பதால் மரங்கள் முறிந்து சாலையில் எந்த நேரத்திலும் விழுந்து விடும் என்று நெடுஞ்சாலைத் துறையிடம் பல முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.
இரவு நேரத்தில் மரம் முறிந்து விழுந்ததால் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்படவில்லை. பகல் நேரத்தில் விழுந்திருந்தால் மிகப்பெரிய அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டிருக்கும் குறிப்பாக பத்தரகாளியம்மன் கோவிலுக்குச் செல்லும் பிரதான சாலையாக உள்ளதாலும், அருகிலே தொழிற்சாலை உள்ளதாலும், மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியாகும்.
எனவே, உடனடியாக நெடுஞ்சாலைத் துறை மற்றும் வருவாய்த் துறையினர் இது போன்ற மரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
2 மாதங்கள் முன்பு மழைக்காலங்களில் மரம் முறிந்து விழுந்ததில் காரமடை மற்றும் சிறுமுகை பகுதியில் இரண்டு பேர் இறந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.