இந்த இயக்கத்தின் படி ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருத்துவ குணம் கொண்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்படுகின்றன.
கோவை: கோவையில் தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் சமீரன் துவக்கி வைத்தார்.
மத்திய அரசால் துவங்கப்பட்ட தூய்மை இந்தியா திட்டம் நாடு முழுவதும் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், அது குறித்து கிராம புறங்களிலும், நகர் புறங்களிலும் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வை மேலும் ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, இன்று கோவையில் இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உறுதி மொழி எடுக்கப்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் உறுதிமொழியை முன்மொழிய, அரசு ஊழியர்கள் பின் மொழிந்தனர்.

மத்திய அரசின் மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் கோவை மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, தூய்மை பாரத கையெழுத்து இயக்கத்தை கோவையில் மாவட்ட ஆட்சியர் இன்று துவக்கி வைத்தார்.
இந்த இயக்கத்தின் படி, கோவை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம், காவல்துறை, தனியார் கல்லூரி மாணவர்கள் இணைந்து தூய்மை பணிகளை மேற்கொள்கின்றனர்.
மேலும் ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருத்துவ குணம் கொண்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்படுகின்றன.

இந்நிகழ்வில் கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, பயிற்சி ஆட்சியர் சரண்யா ராமசந்திரன் உட்பட 50க்கும் மேற்பட்ட அரசு பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

மத்திய அரசால் துவங்கப்பட்ட தூய்மை இந்தியா திட்டம் நாடு முழுவதும் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், அது குறித்து கிராம புறங்களிலும், நகர் புறங்களிலும் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வை மேலும் ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, இன்று கோவையில் இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உறுதி மொழி எடுக்கப்பட்டது.
கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் உறுதிமொழியை முன்மொழிய, அரசு ஊழியர்கள் பின் மொழிந்தனர்.
மத்திய அரசின் மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் கோவை மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, தூய்மை பாரத கையெழுத்து இயக்கத்தை கோவையில் மாவட்ட ஆட்சியர் இன்று துவக்கி வைத்தார்.
இந்த இயக்கத்தின் படி, கோவை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம், காவல்துறை, தனியார் கல்லூரி மாணவர்கள் இணைந்து தூய்மை பணிகளை மேற்கொள்கின்றனர்.
மேலும் ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருத்துவ குணம் கொண்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்படுகின்றன.
இந்நிகழ்வில் கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, பயிற்சி ஆட்சியர் சரண்யா ராமசந்திரன் உட்பட 50க்கும் மேற்பட்ட அரசு பணியாளர்கள் கலந்துகொண்டனர்.