கோவை விமான நிலைய விரிவாக்க நில விவகாரம்: இழப்பீடு தொகை போதாது என்று ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா..!

அரசு கொடுக்கும் இழப்பீடு தொகையை வைத்து, கோவையில் வேறு இடத்தில் நிலம் மட்டுமே வாங்க முடியும், ஆனால் வீடு கட்ட இயலாது - உப்பிலிப்பாளையம் கிராம மக்கள் நலச் சங்கத்தினர்.



கோவையில் உள்ள சர்வதேச விமான நிலைய ஓடுதளம் விரிவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக விமான நிலையத்தை சுற்றியுள்ள நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, அதற்கான இழப்பீடும் வழங்கப்படுகிறது. சமீபத்தில், கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கான நிலுவை தொகை ரூ.1,132 கோடியை விடுவித்து போக்குவரத்து துறை அரசாணை வெளியிட்டுள்ளது.



இந்த நிலையில், அரசின் இழப்பீடு தொகையை வைத்து நிலம் மட்டுமே வாங்க முடியும் என்றும், அதில், வீடு கட்ட முடியாது என்று கூறி உப்பிலிப்பாளையம் கிராம மக்கள் நலச் சங்கத்தினர் 30க்கும் மேற்ப்பட்டோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதாகைகளை ஏந்தி தர்ணாவில் ஈடுப்பட்டனர்.

இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், விமான நிலைய ஓடுதள விரிவாக்கத்திற்காக உப்பிலிப்பாளையம் கிராமத்தில் உள்ள சாஸ்தா நகர், அருள் முருகன் நகர், காந்தி நகத் ஆகிய பகுதிகளில் உள்ள 110 வீடுகள் நில எடுப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், அதிலும் 20 வீட்டார்களுக்கு மட்டும் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். அதேசமயம், அரசு வழங்கும் இழப்பீட்டு தொகையானது 4 செண்ட் இடத்தில் தார்சு வீடு கட்டி இருப்பவர்களுக்கு 33 லட்சம் முதல் 38 லட்சம் மட்டுமே வழங்கப்படுவதாகவும், 2 செண்ட் சிமெண்ட் சீட் வீடு இருப்பவர்களுக்கு 15 லட்சம் இழப்பீடு என்பது மிகவும் குறைவாக இருப்பதாகவும் குற்றம் சாட்டினர்.



அரசு கொடுக்கும் இழப்பீடு தொகையை வைத்து, கோவையில் வேறு இடத்தில் நிலம் மட்டுமே வாங்க முடியும், ஆனால் வீடு கட்ட இயலாது என்று தெரிவித்தனர். எனவே, மாற்று இடம் வழங்க வேண்டுமென, உப்பிலிப்பாளையம் கிராம மக்கள் நலச் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...