கோவை கிணத்துக்கடவு சுற்றுவட்டாரப் பகுதியில் பெய்த தொடர் மழையால் தக்காளி செடிகள் அழுகி நாசம் - விவசாயிகள் வேதனை..!!

ஏக்கர் ஒன்றுக்கு 80 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து தக்காளி சாகுபடி செய்து வந்த நிலையில், தொடர் மழை காரணமாக தக்காளி செடிகள் கருகியதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு சுற்றுவட்டாரப் பகுதியில் பெய்துவரும் தொடர் மழையால் தக்காளி செடிகள் அழுகி நாசமானதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதிகளில் தென்னை சாகுபடிக்கு அடுத்தபடியாக தக்காளி சாகுபடி அதிகளவில் விவசாயிகள் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், கிணத்துக்கடவு சுற்றுவட்டாரப் பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட தக்காளி அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், கடந்த 10 நாட்களாக கிணத்துக்கடவு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தக்காளி செடிகள் அழுகி நாசமானது.



மேலும், அறுவடைக்கு தயாராக இருந்த தக்காளி அனைத்தும் செடிகளிலேயே அழுகி வீணாகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

ஏக்கர் ஒன்றுக்கு 80 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து தக்காளி சாகுபடி செய்து வந்த நிலையில், தொடர் மழை காரணமாக தக்காளி செடிகள் கருகியதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

இதனிடையே, தொடர் மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டதால் கிணத்துக்கடவு சந்தைகளுக்கு தக்காளி வரத்து வெகுவாக குறைந்ததால் தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தையில் ஒரு கிலோ நாட்டுத்தக்காளி 30 ரூபாய் வரை வியாபாரிகள் ஏலம் எடுத்ததால் கடைகளில் தக்காளியின் விலை கிடுகிடுவென உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...