ஏக்கர் ஒன்றுக்கு 80 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து தக்காளி சாகுபடி செய்து வந்த நிலையில், தொடர் மழை காரணமாக தக்காளி செடிகள் கருகியதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
கோவை: கோவை கிணத்துக்கடவு சுற்றுவட்டாரப் பகுதியில் பெய்துவரும் தொடர் மழையால் தக்காளி செடிகள் அழுகி நாசமானதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதிகளில் தென்னை சாகுபடிக்கு அடுத்தபடியாக தக்காளி சாகுபடி அதிகளவில் விவசாயிகள் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், கிணத்துக்கடவு சுற்றுவட்டாரப் பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட தக்காளி அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், கடந்த 10 நாட்களாக கிணத்துக்கடவு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தக்காளி செடிகள் அழுகி நாசமானது.

மேலும், அறுவடைக்கு தயாராக இருந்த தக்காளி அனைத்தும் செடிகளிலேயே அழுகி வீணாகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
ஏக்கர் ஒன்றுக்கு 80 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து தக்காளி சாகுபடி செய்து வந்த நிலையில், தொடர் மழை காரணமாக தக்காளி செடிகள் கருகியதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
இதனிடையே, தொடர் மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டதால் கிணத்துக்கடவு சந்தைகளுக்கு தக்காளி வரத்து வெகுவாக குறைந்ததால் தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தையில் ஒரு கிலோ நாட்டுத்தக்காளி 30 ரூபாய் வரை வியாபாரிகள் ஏலம் எடுத்ததால் கடைகளில் தக்காளியின் விலை கிடுகிடுவென உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதிகளில் தென்னை சாகுபடிக்கு அடுத்தபடியாக தக்காளி சாகுபடி அதிகளவில் விவசாயிகள் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், கிணத்துக்கடவு சுற்றுவட்டாரப் பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட தக்காளி அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், கடந்த 10 நாட்களாக கிணத்துக்கடவு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தக்காளி செடிகள் அழுகி நாசமானது.
மேலும், அறுவடைக்கு தயாராக இருந்த தக்காளி அனைத்தும் செடிகளிலேயே அழுகி வீணாகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
ஏக்கர் ஒன்றுக்கு 80 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து தக்காளி சாகுபடி செய்து வந்த நிலையில், தொடர் மழை காரணமாக தக்காளி செடிகள் கருகியதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
இதனிடையே, தொடர் மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டதால் கிணத்துக்கடவு சந்தைகளுக்கு தக்காளி வரத்து வெகுவாக குறைந்ததால் தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தையில் ஒரு கிலோ நாட்டுத்தக்காளி 30 ரூபாய் வரை வியாபாரிகள் ஏலம் எடுத்ததால் கடைகளில் தக்காளியின் விலை கிடுகிடுவென உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.