கோவை மாநகராட்சி பகுதிகளில் தனிநபர்களால் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கட்டிட வரி மற்றும் காலியிட வரி பாக்கி வைத்துள்ளது குறித்து ஆர் டி ஐ., மூலம் கிடைத்த தகவல்.
கோவை: கோவை மாநகராட்சி பகுதிகளில் தனிநபர்களால் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கட்டிட வரி மற்றும் காலியிட வரி பாக்கி வைத்துள்ளது குறித்து ஆர் டி ஐ., மூலம் தகவல் கிடைத்துள்ளது.
கோவையைச் சேர்ந்த தியாகராஜன் என்ற சமூக ஆர்வலர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கோவை மாநகராட்சி பகுதிகளில் தனிநபர்களால் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய கட்டிட வரி மற்றும் காலி இடம் வரி பாக்கி தொகை செலுத்தப்படாமல் உள்ள 100 நபர்கள் குறித்த விவரங்களைக் கோரி மனு சமர்ப்பித்திருந்தார்.
பல நாட்களுக்குப் பிறகு அந்தத் தகவலை மாநகராட்சி நிர்வாகம் வழங்கியுள்ளது. அதில் கட்டிட வரி ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பாக்கி வைத்துள்ள நபர்கள் குறித்த பட்டியலில் 17 நிறுவனங்களின் பெயர்கள் வெளியிடப்பட்டு மொத்தம் 42,30,89,827 ரூபாய் என்றும் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் காலியிட வரி பாக்கி வைத்துள்ளவர்கள் முதல் 100 பேர் பட்டியலில் 3 தனிநபர்களின் விபரங்கள் வழங்கப்பட்டு மொத்தம் 4,18,30,836 ரூபாய் நிலுவை வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 46.49 கோடி ரூபாய் வரி பாக்கி உள்ளது தெரிய வந்துள்ளது. சமூக ஆர்வலர் தியாகராஜன் கூறுகையில்,"தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கோவை மாநகராட்சி பகுதிகளில் தனிநபர்களால் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய கட்டிட வரி மற்றும் காலி இடம் வரி பாக்கி தொகை செலுத்தப்படாமல் உள்ள 100 நபர்கள் குறித்த விவரங்களைக் கோரி மனு சமர்ப்பித்து இருந்தேன்.
கோவை மாநகராட்சி பொது தகவல் அலுவலர்/உதவி கமிஷனர்(வருவாய்) அண்ணாதுரை அவர்களால் 30 நாட்களுக்குள் தகவல் வழங்கப்படவில்லை. மேல்முறையீட்டு அலுவலர் முன்னால் துணை கமிஷனர் விமல் ராஜன் அவர்களால் 45 நாட்கள் ஆகியும் தகவல் வழங்கப்படவில்லை. 90 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள துணை கமிஷனர் அவர்களால் பதவி ஏற்ற மூன்றாவது நாளில் எனக்குத் தகவல் கிடைத்தது." என்றார்.





கோவையைச் சேர்ந்த தியாகராஜன் என்ற சமூக ஆர்வலர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கோவை மாநகராட்சி பகுதிகளில் தனிநபர்களால் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய கட்டிட வரி மற்றும் காலி இடம் வரி பாக்கி தொகை செலுத்தப்படாமல் உள்ள 100 நபர்கள் குறித்த விவரங்களைக் கோரி மனு சமர்ப்பித்திருந்தார்.
பல நாட்களுக்குப் பிறகு அந்தத் தகவலை மாநகராட்சி நிர்வாகம் வழங்கியுள்ளது. அதில் கட்டிட வரி ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பாக்கி வைத்துள்ள நபர்கள் குறித்த பட்டியலில் 17 நிறுவனங்களின் பெயர்கள் வெளியிடப்பட்டு மொத்தம் 42,30,89,827 ரூபாய் என்றும் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் காலியிட வரி பாக்கி வைத்துள்ளவர்கள் முதல் 100 பேர் பட்டியலில் 3 தனிநபர்களின் விபரங்கள் வழங்கப்பட்டு மொத்தம் 4,18,30,836 ரூபாய் நிலுவை வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 46.49 கோடி ரூபாய் வரி பாக்கி உள்ளது தெரிய வந்துள்ளது. சமூக ஆர்வலர் தியாகராஜன் கூறுகையில்,"தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கோவை மாநகராட்சி பகுதிகளில் தனிநபர்களால் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய கட்டிட வரி மற்றும் காலி இடம் வரி பாக்கி தொகை செலுத்தப்படாமல் உள்ள 100 நபர்கள் குறித்த விவரங்களைக் கோரி மனு சமர்ப்பித்து இருந்தேன்.
கோவை மாநகராட்சி பொது தகவல் அலுவலர்/உதவி கமிஷனர்(வருவாய்) அண்ணாதுரை அவர்களால் 30 நாட்களுக்குள் தகவல் வழங்கப்படவில்லை. மேல்முறையீட்டு அலுவலர் முன்னால் துணை கமிஷனர் விமல் ராஜன் அவர்களால் 45 நாட்கள் ஆகியும் தகவல் வழங்கப்படவில்லை. 90 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள துணை கமிஷனர் அவர்களால் பதவி ஏற்ற மூன்றாவது நாளில் எனக்குத் தகவல் கிடைத்தது." என்றார்.