தேன் கூட்டை அகற்றக்கோரி தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டும் இதுவரை தேன்கூட்டைக் கலைப்பதற்கு நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை மீண்டும் உயிர்ப்பலி ஏற்படும் முன்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை.
கோவை: கிணத்துக்கடவு அருகே இறுதிச்சடங்கு செய்யச் சென்றவர்கள் மீது தேனீக்கள் கூட்டம் கொட்டி சிகிச்சை பெற்று வந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி கடந்த சனிக்கிழமை உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். இவரது உடலை அடக்கம் செய்வதற்காக அவரது உறவினர்கள் கோதவாடி ஆற்றங்கரையில் உள்ள சுடுகாட்டிற்குக் கொண்டு சென்று அங்கு உள்ள மயானத்தில் அடக்கம் செய்தனர்.
இந்நிலையில் இறுதி சடங்கு செய்து கொண்டிருக்கும் போது, திடீரென மாயணம் அருகே உள்ள ஆலமரத்தின் ராட்சத தேன்கூடு திடீரென கலைந்து சுடுகாட்டில் இறுதி சடங்கில் கலந்துகொள்ளவந்த அனைவரையும் துரத்தியது.
இதில் தேனீக்கள் கொட்டியதில் காயமடைந்த 20-க்கும் மேற்பட்டோரைப் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்குத் தேனீக்கள் கொட்டப்பட்டுக் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளித்தனர். பின்னர் மருத்துவச் சிகிச்சை பெற்ற நபர்கள் வீட்டுக்குத் திரும்பினார்.

இந்நிலையில் தேனீ கடித்ததாகச் சிகிச்சை பெற்று வீட்டிற்கு வந்த கொண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த சாமிநாதன் மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டு நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் ஆலமரத்தில் இருக்கும் தேன் கூட்டை அகற்றக்கோரிக் கோதவாடி ஊராட்சி மன்றம் சார்பில் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டும் இதுவரை தேன்கூட்டைக் கலைப்பதற்கு நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை மீண்டும் உயிர்ப்பலி ஏற்படும் முன்பு ஆல மரத்தில் உள்ள தேன் கூட்டை அடுத்து பொதுமக்கள் பாதுகாப்பாகச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி கடந்த சனிக்கிழமை உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். இவரது உடலை அடக்கம் செய்வதற்காக அவரது உறவினர்கள் கோதவாடி ஆற்றங்கரையில் உள்ள சுடுகாட்டிற்குக் கொண்டு சென்று அங்கு உள்ள மயானத்தில் அடக்கம் செய்தனர்.
இந்நிலையில் இறுதி சடங்கு செய்து கொண்டிருக்கும் போது, திடீரென மாயணம் அருகே உள்ள ஆலமரத்தின் ராட்சத தேன்கூடு திடீரென கலைந்து சுடுகாட்டில் இறுதி சடங்கில் கலந்துகொள்ளவந்த அனைவரையும் துரத்தியது.
இதில் தேனீக்கள் கொட்டியதில் காயமடைந்த 20-க்கும் மேற்பட்டோரைப் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்குத் தேனீக்கள் கொட்டப்பட்டுக் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளித்தனர். பின்னர் மருத்துவச் சிகிச்சை பெற்ற நபர்கள் வீட்டுக்குத் திரும்பினார்.
இந்நிலையில் தேனீ கடித்ததாகச் சிகிச்சை பெற்று வீட்டிற்கு வந்த கொண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த சாமிநாதன் மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டு நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் ஆலமரத்தில் இருக்கும் தேன் கூட்டை அகற்றக்கோரிக் கோதவாடி ஊராட்சி மன்றம் சார்பில் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டும் இதுவரை தேன்கூட்டைக் கலைப்பதற்கு நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை மீண்டும் உயிர்ப்பலி ஏற்படும் முன்பு ஆல மரத்தில் உள்ள தேன் கூட்டை அடுத்து பொதுமக்கள் பாதுகாப்பாகச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.