கோவையில் வெல்டிங் கடை உரிமையாளருக்கு சரமாரியாக கத்தி குத்து.!!

கோவை அருகே சுந்தராபுரம் பகுதியில் வெல்டிங் கடை வைத்துள்ள உரிமையாளருக்கு இன்று மர்ம நபர்கள் 3-பேர் கடைக்கு சென்று சரமாரியாகக் கத்தியால் குத்தி சென்றனர்.


கோவை: கோவை அருகே சுந்தராபுரம் பகுதியில் வெல்டிங் கடை வைத்துள்ள உரிமையாளருக்கு இன்று மர்ம நபர்கள் 3-பேர் கடைக்கு சென்று சரமாரியாகக் கத்தியால் குத்தி சென்றனர்.

கோவை சுந்தராபுரம் அடுத்துள்ள கணேச புரத்தைச் சேர்ந்தவர் பிஜின் 33, அந்த பகுதியில் வெல்டிங் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார்.

இன்று காலை தனது கடையில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3-பேர் நேராக கடைக்குள் சென்று தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

ரத்த வெள்ளத்தில் பிஜின் மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து போத்தனூர் இன்ஸ்பெக்டர் நடேசன் 307-பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிஜினை வெட்டியவர்கள் யார்? முன்விரோதம் காரணமா? என விசாரித்து வருகின்றனர்.

மேலும் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...