கோவை அருகே சுந்தராபுரம் பகுதியில் வெல்டிங் கடை வைத்துள்ள உரிமையாளருக்கு இன்று மர்ம நபர்கள் 3-பேர் கடைக்கு சென்று சரமாரியாகக் கத்தியால் குத்தி சென்றனர்.
கோவை: கோவை அருகே சுந்தராபுரம் பகுதியில் வெல்டிங் கடை வைத்துள்ள உரிமையாளருக்கு இன்று மர்ம நபர்கள் 3-பேர் கடைக்கு சென்று சரமாரியாகக் கத்தியால் குத்தி சென்றனர்.
கோவை சுந்தராபுரம் அடுத்துள்ள கணேச புரத்தைச் சேர்ந்தவர் பிஜின் 33, அந்த பகுதியில் வெல்டிங் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார்.
இன்று காலை தனது கடையில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3-பேர் நேராக கடைக்குள் சென்று தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
ரத்த வெள்ளத்தில் பிஜின் மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து போத்தனூர் இன்ஸ்பெக்டர் நடேசன் 307-பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிஜினை வெட்டியவர்கள் யார்? முன்விரோதம் காரணமா? என விசாரித்து வருகின்றனர்.
மேலும் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை சுந்தராபுரம் அடுத்துள்ள கணேச புரத்தைச் சேர்ந்தவர் பிஜின் 33, அந்த பகுதியில் வெல்டிங் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார்.
இன்று காலை தனது கடையில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3-பேர் நேராக கடைக்குள் சென்று தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
ரத்த வெள்ளத்தில் பிஜின் மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து போத்தனூர் இன்ஸ்பெக்டர் நடேசன் 307-பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிஜினை வெட்டியவர்கள் யார்? முன்விரோதம் காரணமா? என விசாரித்து வருகின்றனர்.
மேலும் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.