நிதி நிறுவனம் நடத்தி அதிக வட்டி தருவதாகக் கூறி பணம் வசூலித்து ரூ.4.73 கோடி மோசடி செய்த நிதி நிறுவன இயக்குனருக்கு 10-ஆண்டு சிறைத் தண்டனை விதித்து டான்பிட் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
கோவை: நிதி நிறுவனம் நடத்தி அதிக வட்டி தருவதாகக் கூறி பணம் வசூலித்து ரூ.4.73 கோடி மோசடி செய்த நிதி நிறுவன இயக்குனருக்கு 10-ஆண்டு சிறைத் தண்டனை விதித்து டான்பிட் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
கோவை மாணிக்கம்பாளையம் ரோடு நேதாஜி நகரைச் சேர்ந்தவர் செல்லமுத்து வயது 50. இவரது மனைவி பராசக்தி உறவினர்கள் குருசாமி உள்ளிட்ட 6-பேர் கூட்டாகச் சேர்ந்து கடந்த 2009-ஆம் ஆண்டு அன்னை இம்போ டெக் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக செல்லமுத்து இருந்துள்ளார்.
இங்கு முதலீடு செய்தால் கூடுதல் வட்டி தருவதாக அறிவித்தார். இதனையடுத்து ஏராளமானோர் பணத்தை முதலீடு செய்தனர். இந்த பணத்தைப் பொதுமக்களுக்குத் திரும்பக் கொடுக்க வில்லை.
இதனால் முதலீடு செய்தவர்கள் இது குறித்துக் கடந்த 2010-ஆம் ஆண்டு ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் இந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் ரூபாய் 4-கோடியே 73-லட்சத்து 94-ஆயிரம் வசூலித்து மோசடி செய்தது தெரியவந்ததையடுத்து செல்லமுத்து உள்ளிட்ட 6-பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுதொடர்பாக வழக்கு கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர் நல நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்தது அடுத்து நேற்று மாலை தீர்ப்பு கூறப்பட்டது.
அதன் படி குற்றம்சாட்டப்பட்ட செல்லமுத்துவுக்கு 10-ஆண்டு சிறைத் தண்டனையும் ரூபாய் 4- கோடியே 75-லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
அபராதத் தொகையைக் கட்ட தவறினால் மேலும் 2-ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். அபராத தொகையைப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவும் நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார். மேலும் இந்த வழக்கில் மற்ற 5-பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
கோவை மாணிக்கம்பாளையம் ரோடு நேதாஜி நகரைச் சேர்ந்தவர் செல்லமுத்து வயது 50. இவரது மனைவி பராசக்தி உறவினர்கள் குருசாமி உள்ளிட்ட 6-பேர் கூட்டாகச் சேர்ந்து கடந்த 2009-ஆம் ஆண்டு அன்னை இம்போ டெக் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக செல்லமுத்து இருந்துள்ளார்.
இங்கு முதலீடு செய்தால் கூடுதல் வட்டி தருவதாக அறிவித்தார். இதனையடுத்து ஏராளமானோர் பணத்தை முதலீடு செய்தனர். இந்த பணத்தைப் பொதுமக்களுக்குத் திரும்பக் கொடுக்க வில்லை.
இதனால் முதலீடு செய்தவர்கள் இது குறித்துக் கடந்த 2010-ஆம் ஆண்டு ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் இந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் ரூபாய் 4-கோடியே 73-லட்சத்து 94-ஆயிரம் வசூலித்து மோசடி செய்தது தெரியவந்ததையடுத்து செல்லமுத்து உள்ளிட்ட 6-பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுதொடர்பாக வழக்கு கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர் நல நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்தது அடுத்து நேற்று மாலை தீர்ப்பு கூறப்பட்டது.
அதன் படி குற்றம்சாட்டப்பட்ட செல்லமுத்துவுக்கு 10-ஆண்டு சிறைத் தண்டனையும் ரூபாய் 4- கோடியே 75-லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
அபராதத் தொகையைக் கட்ட தவறினால் மேலும் 2-ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். அபராத தொகையைப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவும் நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார். மேலும் இந்த வழக்கில் மற்ற 5-பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.