அதிக வட்டி தருவதாகக் கூறி 4.74 கோடி மோசடி.. கோவை நிதி நிறுவன இயக்குனருக்கு 10 -ஆண்டு சிறை.!!

நிதி நிறுவனம் நடத்தி அதிக வட்டி தருவதாகக் கூறி பணம் வசூலித்து ரூ.4.73 கோடி மோசடி செய்த நிதி நிறுவன இயக்குனருக்கு 10-ஆண்டு சிறைத் தண்டனை விதித்து டான்பிட் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.


கோவை: நிதி நிறுவனம் நடத்தி அதிக வட்டி தருவதாகக் கூறி பணம் வசூலித்து ரூ.4.73 கோடி மோசடி செய்த நிதி நிறுவன இயக்குனருக்கு 10-ஆண்டு சிறைத் தண்டனை விதித்து டான்பிட் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

கோவை மாணிக்கம்பாளையம் ரோடு நேதாஜி நகரைச் சேர்ந்தவர் செல்லமுத்து வயது 50. இவரது மனைவி பராசக்தி உறவினர்கள் குருசாமி உள்ளிட்ட 6-பேர் கூட்டாகச் சேர்ந்து கடந்த 2009-ஆம் ஆண்டு அன்னை இம்போ டெக் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக செல்லமுத்து இருந்துள்ளார்.

இங்கு முதலீடு செய்தால் கூடுதல் வட்டி தருவதாக அறிவித்தார். இதனையடுத்து ஏராளமானோர் பணத்தை முதலீடு செய்தனர். இந்த பணத்தைப் பொதுமக்களுக்குத் திரும்பக் கொடுக்க வில்லை.

இதனால் முதலீடு செய்தவர்கள் இது குறித்துக் கடந்த 2010-ஆம் ஆண்டு ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் இந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் ரூபாய் 4-கோடியே 73-லட்சத்து 94-ஆயிரம் வசூலித்து மோசடி செய்தது தெரியவந்ததையடுத்து செல்லமுத்து உள்ளிட்ட 6-பேரை போலீசார் கைது செய்தனர்.

இதுதொடர்பாக வழக்கு கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர் நல நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்தது அடுத்து நேற்று மாலை தீர்ப்பு கூறப்பட்டது.

அதன் படி குற்றம்சாட்டப்பட்ட செல்லமுத்துவுக்கு 10-ஆண்டு சிறைத் தண்டனையும் ரூபாய் 4- கோடியே 75-லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

அபராதத் தொகையைக் கட்ட தவறினால் மேலும் 2-ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். அபராத தொகையைப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவும் நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார். மேலும் இந்த வழக்கில் மற்ற 5-பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...