கோவை மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்களில் காப்பிணி தாய்மார்கள், தாய் சேய்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மற்றும் வளர்ச்சிப்பணிகள் குறித்தும் மாநகராட்சி ஆணையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோவை: கோவை மாநகராட்சி வடக்கு மண்டல பகுதிகளில் நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையங்களில் மாநகராட்சி ஆணையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை மாநகராட்சி வடக்கு மண்டல பகுதிகளில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காப்பிணி தாய்மார்கள், தாய் சேய்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மற்றும் வளர்ச்சிப்பணிகள் குறித்தும் மாநகராட்சி ஆணையாளார் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா இன்று (05.10.2021) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.41க்குட்பட்ட கணபதி பகுதியிலுள்ள காந்தி மாநகர் நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையம், வார்டு எண்.1க்குட்பட்ட துடியலூர் நகாப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர்,

ஆரம்பச் சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெறும் காப்பிணி தாய்மார்கள், தாய் சேய்களுக்குப் போடப்படும் தடுப்பூசிகள், அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், தாய் சேய் நல பாதுகாப்பு அட்டையில் அதன் விபரங்களைப் பதிவு செய்து பராமரிப்பது, அதனைக் கணினியில் பதிவேற்றம் செய்யப்படும் பணிகள், டாக்டா். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுவது, சித்த மருத்துவ பிரிவு மூலம் சிகிச்சை அளிக்கப்படுவது குறித்து ஆய்வு மேற்கொண்ட பின்,

தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தின் மூலம் சிகிச்சை பெறும் நபர்களின் வீட்டிற்குச் சென்று அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, மருந்து மாத்திரைகள் வழங்கப்படும் முறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, வடக்கு மண்டலம் வார்டு எண்.41க்குட்பட்ட வெற்றி விநாயகர் நகரில் ரூ.40 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்டு விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரும் நிலையிலுள்ள சிறுவர் பூங்கா மற்றும் ராஜா நகரில் உள்ள சிறுவர் பூங்கா ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர் பூங்காக்களின் உட்பகுதி மற்றும் சுற்றுப்புறத்தினை குப்பைகள் இல்லாமல் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலாகளிடம் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, மாநகராட்சி நகர்நல அலுவலர் மரு.சதீஷ்குமார், வடக்கு மண்டல உதவி ஆணையாளர் மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளர் செந்தில் பாஸ்கர், மண்டல சுகாதார அலுவலர் இராமச்சந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலார்கள் உடனிருந்தனர்.
கோவை மாநகராட்சி வடக்கு மண்டல பகுதிகளில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காப்பிணி தாய்மார்கள், தாய் சேய்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மற்றும் வளர்ச்சிப்பணிகள் குறித்தும் மாநகராட்சி ஆணையாளார் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா இன்று (05.10.2021) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.41க்குட்பட்ட கணபதி பகுதியிலுள்ள காந்தி மாநகர் நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையம், வார்டு எண்.1க்குட்பட்ட துடியலூர் நகாப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர்,
ஆரம்பச் சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெறும் காப்பிணி தாய்மார்கள், தாய் சேய்களுக்குப் போடப்படும் தடுப்பூசிகள், அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், தாய் சேய் நல பாதுகாப்பு அட்டையில் அதன் விபரங்களைப் பதிவு செய்து பராமரிப்பது, அதனைக் கணினியில் பதிவேற்றம் செய்யப்படும் பணிகள், டாக்டா். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுவது, சித்த மருத்துவ பிரிவு மூலம் சிகிச்சை அளிக்கப்படுவது குறித்து ஆய்வு மேற்கொண்ட பின்,
தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தின் மூலம் சிகிச்சை பெறும் நபர்களின் வீட்டிற்குச் சென்று அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, மருந்து மாத்திரைகள் வழங்கப்படும் முறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, வடக்கு மண்டலம் வார்டு எண்.41க்குட்பட்ட வெற்றி விநாயகர் நகரில் ரூ.40 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்டு விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரும் நிலையிலுள்ள சிறுவர் பூங்கா மற்றும் ராஜா நகரில் உள்ள சிறுவர் பூங்கா ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர் பூங்காக்களின் உட்பகுதி மற்றும் சுற்றுப்புறத்தினை குப்பைகள் இல்லாமல் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலாகளிடம் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, மாநகராட்சி நகர்நல அலுவலர் மரு.சதீஷ்குமார், வடக்கு மண்டல உதவி ஆணையாளர் மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளர் செந்தில் பாஸ்கர், மண்டல சுகாதார அலுவலர் இராமச்சந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலார்கள் உடனிருந்தனர்.