மக்களைத்‌ தேடி மருத்துவம்‌ திட்டத்தின்‌ மூலம்‌ அளிக்கப்படும்‌ சிகிச்சை முறைகள்‌ குறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர்‌ ஆய்வு.!!

கோவை‌ மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்களில்‌ காப்பிணி தாய்மார்கள்‌, தாய்‌ சேய்களுக்கு அளிக்கப்படும்‌ சிகிச்சை முறைகள்‌ குறித்தும்‌, மக்களைத்‌ தேடி மருத்துவம்‌ திட்டம்‌ மற்றும்‌ வளர்ச்சிப்பணிகள்‌ குறித்தும்‌ மாநகராட்சி ஆணையாளர் நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: கோவை‌ மாநகராட்சி வடக்கு மண்டல பகுதிகளில்‌ நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையங்களில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



கோவை‌ மாநகராட்சி வடக்கு மண்டல பகுதிகளில்‌ உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில்‌ காப்பிணி தாய்மார்கள்‌, தாய்‌ சேய்களுக்கு அளிக்கப்படும்‌ சிகிச்சை முறைகள்‌ குறித்தும்‌, மக்களைத்‌ தேடி மருத்துவம்‌ திட்டம்‌ மற்றும்‌ வளர்ச்சிப்பணிகள்‌ குறித்தும்‌ மாநகராட்சி ஆணையாளார் மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இன்று (05.10.2021) நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.41க்குட்பட்ட கணபதி பகுதியிலுள்ள காந்தி மாநகர்‌ நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையம்‌, வார்டு எண்‌.1க்குட்பட்ட துடியலூர் நகாப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில்‌ ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர்‌‌,



ஆரம்பச் சுகாதார நிலையங்களில்‌ சிகிச்சை பெறும்‌ காப்பிணி தாய்மார்கள்‌, தாய்‌ சேய்களுக்குப் போடப்படும்‌ தடுப்பூசிகள்‌, அவர்களுக்கு அளிக்கப்படும்‌ சிகிச்சை முறைகள்‌, தாய்‌ சேய்‌ நல பாதுகாப்பு அட்டையில்‌ அதன்‌ விபரங்களைப் பதிவு செய்து பராமரிப்பது, அதனைக் கணினியில்‌ பதிவேற்றம்‌ செய்யப்படும்‌ பணிகள்‌, டாக்டா்‌. முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தில்‌ கர்ப்பிணி தாய்மார்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுவது, சித்த மருத்துவ பிரிவு மூலம்‌ சிகிச்சை அளிக்கப்படுவது குறித்து ஆய்வு மேற்கொண்ட பின்‌,



தமிழக அரசால்‌ கொண்டுவரப்பட்ட மக்களைத்‌ தேடி மருத்துவ திட்டத்தின்‌ மூலம்‌ சிகிச்சை பெறும்‌ நபர்களின்‌ வீட்டிற்குச் சென்று அவர்களுக்கு அளிக்கப்படும்‌ சிகிச்சை, மருந்து மாத்திரைகள்‌ வழங்கப்படும்‌ முறைகள்‌ குறித்தும்‌ கேட்டறிந்தார்.



தொடர்ந்து, வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.41க்குட்பட்ட வெற்றி விநாயகர்‌ நகரில்‌ ரூ.40 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ புதியதாக அமைக்கப்பட்டு விரைவில்‌ பயன்பாட்டிற்கு கொண்டுவரும்‌ நிலையிலுள்ள சிறுவர்‌ பூங்கா மற்றும்‌ ராஜா நகரில்‌ உள்ள சிறுவர்‌ பூங்கா ஆகியவற்றை நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர்‌ பூங்காக்களின்‌ உட்பகுதி மற்றும்‌ சுற்றுப்புறத்தினை குப்பைகள்‌ இல்லாமல்‌ தூய்மையாக வைத்திருக்க வேண்டும்‌ என சம்பந்தப்பட்ட அலுவலாகளிடம்‌ தெரிவித்தார்‌.



இந்த ஆய்வின்போது, மாநகராட்சி நகர்நல அலுவலர்‌ மரு.சதீஷ்குமார்‌, வடக்கு மண்டல உதவி ஆணையாளர்‌ மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளர்‌ செந்தில்‌ பாஸ்கர், மண்டல சுகாதார அலுவலர்‌ இராமச்சந்திரன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலார்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...